Sunday, February 1, 2009

12 - பாண்டவர்..கௌரவர் பிறப்பு

அரியணை ஏறிய பாண்டு அஸ்தினாபுரத்திற்கு அடங்கா மன்னர்களை அடக்கி..அவர்களை கப்பம் கட்ட வைத்தான்.நாட்டில் நல்லாட்சி செய்தான்.பாண்டுவின் செயல்களை மக்கள் பாராட்ட..பீஷ்மரும் மகிழ்ந்தார்.

ஒருநாள் வேட்டையாட..பாண்டு தன் மனைவியர்.பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்றான்.அங்கு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த இரு மான்கள் மீது..சற்றும் யோசனையின்றி அம்பு செலுத்தினான்.ஆண்மானாக இருந்த கிந்தமர் என்னும் முனிவர் பாண்டுவிற்கு 'இல்லற இன்பத்தை விரும்பிப் பாண்டு மனைவியுடன் கூடும் போது இறப்பான்" என சாபமிட்டார்.இதனால்..மகப்பேறு இல்லாமல் போகுமே என பாண்டு கவலையுற்றான்.

மன்னனின் கலக்கம் கண்ட குந்தி..தனது இளமைப்பருவத்தில்..துர்வாசர் அருளிய மந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள்.அதைக் கேட்டு பாண்டு மகிழ்ந்தான்.

பின்..குந்தி, தர்மதேவதையை எண்ணி மந்திரத்தை ஓத..யுதிஷ்டிரனை பெற்றாள்.வாயு பகவான் அருளால் பீமன் பிறந்தான்..தேவேந்திரன் அருளால் அர்ச்சுனன் பிறந்தான்.

பாண்டுவின் விருப்பப்படி..மாத்ரிக்கு மந்திரத்தை உபதேசிக்க..மாத்ரியும் அம்மந்திரத்தை..இரட்டையர்களான அசுவனி தேவர்களை எண்ணி ஜபித்தாள்.அதனால்..நகுலன்,சகாதேவன்..பிறந்தனர்.

ஐந்து அருமைப் புதல்வரை பாண்டு அடைந்தான்.

அஸ்தினாபுரத்தில்..திருதிராட்டினன்..பாண்டு அடைந்த சாபத்தை எண்ணி..அவனுக்கு மகப்பேறு இல்லை..என மகிழ்வுடன் இருந்தான்.நாடாளும் உரிமை..தன் சந்ததிக்கே என்றிருந்தான்.அப்போது பாண்டு மகப்பேறு அடைந்த விஷயத்தை அறிந்தான்.அப்போது காந்தாரியும் கருத்தரித்திருந்தாள்.குந்திக்கு குழந்தைகள் பெற்ற செய்தி அறிந்து..ஆத்திரத்தில் தன் வயிற்றில் அடித்துக் கொண்டாள்.அதன் விளைவாக..மாமிச பிண்டம் வெளிப்பட்டது.வியாசர் அருளால்...அதிலிருந்து நாளொன்றுக்கு ஒருவர் வீதம்..நூறு ஆண் குழந்தைகளும்..ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.இந்த நூற்றொருவரைப் பெற..நூற்றொரு நாட்கள் ஆயிற்று.காட்டில் பீமன் பிறந்த அன்று அஸ்தினாபுரத்தில் துரியோதனன் பிறந்தான்.

துரியோதனன்..பேராசையும்..பிடிவாதமும் உடையவனாக வளர்ந்தான்.அவனை அடுத்து பிறந்த துச்சாதனன்..தீமையில் அண்னனை மிஞ்சினான்.கடைசி தம்பியான விகர்ணன் தவிர அனைவரும் கொடியவர்களே.

காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர் ஐவரும்..ரிஷிகளிடம் கல்வி கற்று..அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில்..ஒரு நாள் காமவயப்பட்டு..பாண்டு மாத்ரியை அணுகிய போது...பண்டைய சாபத்தால்...உயிரிழந்தான்.மாத்ரியும் உடன் அவனுடன் இறந்தால்.குந்தியும்...பாண்டவர்களும்..பீஷ்மரிடம் வந்தனர்.திருதிராட்டினனும்..அன்புள்ளவன் போல நடந்துக் கொண்டான்.சத்யவதியும்,அம்பிகையும்,அம்பாலிகையும் தவத்தை நாடிச் சென்றனர்.

குரு வம்சத்திற்குரிய மன்னனை நியமிக்கும் பொறுப்பு பீஷ்மரிடம் வந்தது.

4 comments:

மணிகண்டன் said...

romba fastaa poguthu kathai.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கதை ஃபாஸ்டாக போனாலும்..முக்கிய நிகழ்ச்சிகள் எதையும் விடவில்லை மணி.

Unknown said...

சூப்பர் சார்!!! செம விறுவிறுப்பு....எளிதாக புரியும்படி இருக்கிறது உங்கள் நடை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கமல்

Post a Comment