Wednesday, February 11, 2009

16- அரக்கு மாளிகை எரிந்தது

திருதராட்டிரன் யுதிஷ்டிரரை அழைத்து..'வாழ்வதற்கு ஏற்ற இடம் வாரணாவதம்..நீ உன் தாய், தம்பிகளுடன் சென்று, சில காலம் தங்கி விடு' என்றார்.

புத்திசாலியான..யுதிஷ்டிரருக்கு..அவரது எண்ணம் புரிந்தது.பீஷ்மர்,துரோணர்,விதுரர் ஆகியோரிடம் ஆசி பெற்று அவர்கள் செல்லலாயினர்.

பாண்டவர்களுடன் விதுரர்..நெடுந்தூரம் சென்றார்..துரியோதனின் நோக்கத்தை மறைமுகமாக..'காடு தீப் பற்றி.எரியும் போது..எலிகள் பூமிக்குள் உள்ள வளையில் புகுந்து தப்பிவிடும்" என்றார்.இந்த எச்சரிக்கையை பாண்டவர்கள் புரிந்துக் கொண்டனர்.பின் விதுரர் நகரம் திரும்பிவிட்டார்.

வாரணாவதத்து மக்கள்..பாண்டவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.புரோசனன் அவர்களை அணுகி தான் அமைத்திருக்கும் அரக்கு மாளிகையில் தங்குமாறு..வேண்டினான்.பாண்டவர்கள்..ஏதும் அறியாதவர்கள் போல..அங்கு தங்கினர்.

அந்த மாளிகை..அரக்கு,மெழுகு போன்ற பொருள்கள் கொண்டு..எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

துரியோதனன் எண்னத்தைப் புரிந்துக்கொண்ட பீமன் 'இப்போதே..அஸ்தினாபுரம் சென்று..துரியோதனனுடன் போர் புரிய வேண்டும் என துடித்தான். 'துரியோதனனின் சூழ்ச்சியை முறியடிப்போம்..பொறுமையாய் இரு' என யுதிஷ்டிரர் கூறினார்.

பகலில் வேட்டையாடச் செல்வது போல..மாளிகையைச் சுற்றி..ரகசிய வழிகளை அடையாளம் கண்டுகொண்டார்கள் அவர்கள்.

விதுரர்..பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு..ஒருவனை அனுப்பினார்.பகல் நேரத்தில்..புரோசனனை அழைத்துக் கொண்டு..காட்டுக்கு அவர்கள் செல்லும் போது..அந்த ஆள் ..மாளிகையிலிருந்து வெளியேற சுரங்கம் ஒன்றை அமைத்தான்.

குந்தியும்,பாண்டவர்களும் தூங்கும் போது..இரவில்..அரக்கு மாளிகையை தீயிட புரோசனன் எண்னினான்.

குந்தியைக் காண..ஒரு வேட்டுவச்சி..தனது..ஐந்து மகன்களுடன் வந்தாள்.அவர்களுடன் விருந்து உண்டு..அங்கேயே அன்றிரவு தங்கினாள்..வேடுவச்சி.

பீமன் நள்ளிரவில்..தாயையும், சகோதரர்களையும்..சுரங்க வழியாக சென்றுவிடுமாறு கூறிவிட்டு..மாளிகையின் அனைத்து பகுதிகளிலும்..தீ வைத்து விட்டு.. தப்பினான்.

பாண்டவர்கள்..குந்தியுடன்..சுரங்கம் வழியே வெளியேறி..ஒரு காட்டை அடைந்தனர்.விதுரரால் அனுப்பப்பட்ட..ஒரு படகோட்டி..அவர்கள் கங்கையைக் கடக்க உதவினான்.பாண்டவர்கள் முன் பின் தெரியாத ஒரு நாட்டை அடைந்தனர்.

இதற்கிடையே..அரக்கு மாளிகை எரிந்து...ஏழு சடலங்களையும் கண்டவர்கள்..குந்தி, பாண்டவர்கள், புரோசனன் ஆகியோர் இறந்தனர் என எண்ணினர்.

பீஷ்மரும் இது கேட்டு பெரிதும் துக்கம் அடைந்தார்.திருதராட்டிரனும் துயருற்றவன் போல நடித்தான்..பாண்டவர்களுக்கு ஈமச் சடங்குகளை செய்து முடித்தனர்.

No comments:

Post a Comment