Monday, February 2, 2009

13 - கர்ணன் முடி சூட்டப்பட்டான்

ஆரம்பத்தில்..பாண்டவர்கள்,கௌரவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.பலப்பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.துரியோதனன் எல்லாவற்றிலும் தானே முதலில் வர வேண்டும் என நினைத்தான்..ஆனால் அர்ச்சுனனும்,பீமனுமே சிறந்து காணப்பட்டனர்.

பீமனது ஆற்றல்..துரியோதனனுக்கு..அச்சத்தையும்..பொறாமையையும் கொடுத்தது.அதுவே..காலப்போக்கில் பாண்டவர் அனைவரையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளியது.தானே அரசராக வேண்டும்
என துரியோதனன் எண்ணினான்.ஆனால்...யுதிஷ்டிரனே இளவரசுப் பதவிக்கு உரியவன் ஆனான்.மனம் வெதும்பிய துரியோதனன் ..பாண்டவர்களை ஒழிக்க வழி தேடினான்.

ஒரு சமயம்...ஆற்றங்கரையில் அனைவரும் விளையாடிக்கொண்டிருக்கும் போது...பீமனுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்தான் துரியோதனன்.அதனால் மயக்கமுற்றான் பீமன்.துரியோதனன் உடனே அவன் கை..கால்களைக் கட்டி ஆற்றில் எறிந்தான்.விளையாட்டு முடிந்து திரும்பியதில் பீமன் இல்லாது கண்டு குந்தி கவலையுற்றாள்.துரியோதனன் மீது சந்தேகப்பட்டவள்..விதுரரிடம் அதை தெரிவித்தாள்.சந்தேகத்தை வெளிக்காட்டவேண்டாம் என்றும்..தெரிந்தால்..பல இன்னல்கள் விளையும் என விதுரர் எச்சரித்தார்.

ஆற்றில் தூக்கி எறியப்பட்ட பீமன் மீது பல விஷப்பாம்புகள் ஏறி கடித்தன.விஷம்..விஷத்தை முறித்தது.பீமன் எழுந்தான்.பாம்புகளை உதறித் தள்ளினான்.பீமனின் ஆற்றலைக் கண்ட வாசுகி..அவனுக்கு அமிழ்தத்தை அளித்தது.புதுப்பொலிவுடன் பீமன் வீடு திரும்பினான்.

பீஷ்மர் அனைவருக்கும்...விற்பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். கிருபாசாரியாரும்,துரோணாசாரியாரும்..அப்பொறுப்பை ஏற்றனர்.அனைவரும் வில்வித்தையில் வீரர் ஆயினர்.ஆயினும் அர்ச்சுனன் தலை சிறந்து விளங்கினான்.ஒரு மரம்..அடர்ந்த கிளைகள்..அவற்றின் ஒன்றில் ஒரு குருவி..அதைக் குறி வைத்து அம்பு எய்த வேண்டும்.இச் சோதனையில் சீடர்கள் ..மரம் தெரிகிறது..கிளை தெரிகீறது..இலை தெரிகிறது என்றனர்.ஆனால் அர்ச்சுனன் மட்டும் குருவி தெரிகிறது என்றான்.அதை நோக்கி அம்பெய்தினான்.அர்ச்சுனனின் அறிவுக் கூர்மையை உணர்ந்த ஆசாரியார் அவனுக்கு வில் வித்தையில் எல்லா நுட்பங்களையும் கற்றுத் தந்தார்.

குந்திக்கு சூரியன் அருளால் பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து கங்கையில் இட்டாள் அல்லவா? அந்த பெட்டியை..திருதராட்டிரனின் தேர்ப்பாகன் கண்டெடுத்தான்.மகப்பேறற்ற அவன்..அக்குழந்தையை எடுத்து வளர்த்தான்.அவனே கர்ணனாவான்.கௌரவர்,பாண்டவருடன் சேர்ந்து வில்வித்தையைக் கற்றான் கர்ணன்.அர்ச்சுனனுக்கு சமமாக அவன் திகழ்ந்ததால்...துரியோதனனுக்கு அவனிடம் நட்பு ஏற்பட்டது.

ஒரு சமயம் போட்டிகள் நடைப்பெற்றன..போட்டியைக்காண அனைவரும் வந்திருந்தனர்.துரோணரின் கட்டளைப்படி..பீமனும்,துரியோதனனும் கதை யுத்தத்தில் ஈடுபட்டனர்.போட்டி நீண்ட நேரம் நடைப் பெற்ற படியால்..கடைசியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.விளையாட்டு..வினையாவதை உணர்ந்த துரோணர் போட்டியை நிறுத்தினார்.

அடுத்து..விற்போட்டி.அர்ச்சுனன் தன் திறமையைக் காட்டினான்.உடன் கர்ணன்..அவனை தன்னுடன் போட்டியிட அழைத்தான்.ஆனால்..கிருபாசாரியார்..கர்ணனை அவமானப்படுத்தும் வகையில்..'தேர்ப்பாகன் மகன்..அரசகுமாரனான அர்ச்சுனனுடன் போரிட தகுதியற்றவன்'என்றார்.பிறப்பால் தான் இழிந்தவன் என்ற பேச்ச்க் கேட்டு கர்ணன் நாணி தலை குனிந்தான்.

நண்பனுக்கு..நேர்ந்த அவமானத்தைப் போக்க விரும்பிய துரியோதனன்..அங்கேயே..கர்ணனை அங்க நாட்டுக்கு அதிபதியாக முடிசூட்டினான்.

No comments:

Post a Comment