Friday, January 30, 2009

11 - சகோதரர்கள் திருமணம்

திருதராட்டிரன், பாண்டு, விதுரர் மூவரையும்.. பீஷ்மர் தந்தை போல் இருந்து கவனித்துக் கொண்டார்.போர் பயிற்சிகளையும்,சாத்திரக் கல்வியையும் அளித்தார்.அரசு காரியங்களை பீஷ்மரே கவனித்துக் கொண்டதால்..நாட்டில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது.

மைந்தர்கள் மூவரும்..மணப்பருவம் அடைய... பீஷ்மர் திருதராட்டினனுக்கு காந்நார நாட்டு மன்னன் சுபவனுடைய மகளான காந்தாரியை மணமுடித்தார்.கணவன் குருடனாக இருந்ததால், காந்தாரியும்...வாழ்நாள் முழுவதும்..கண்களை துணியால் கட்டிக்கொண்டு தானும் குருடு போலவே இருந்தாள்.(காந்தாரியின் இவ்விரதம்...பீஷ்மரின் விரதம் போன்றது).காந்தாரியின் பத்து சகோதரிகளும் திருதராட்டிரனை மணந்துக் கொண்டனர்.கௌரவ வம்ச அழிவுக்குக் காரணமான சகுனி..காந்தாரியின் சகோதரன் ஆவான்.

யது வம்சத்தில் சூரசேனன் என்னும் மன்னன் இருந்தான்..அவனுக்கு பிரிதா..என்ற மகளும், வசுதேவன் என்னும் மகனும் பிறந்தனர்.(இந்த வசுதேவனே...கிருஷ்ணனின் தந்தை ஆகும்)சூரசேனன் தன் மகளை குந்திராஜனுக்கு..வளர்ப்பு மகனாகக் கொடுத்தான்.இதனால் பிரிதாவிற்கு..குந்தி என்ற பெயர் உண்டானது.ஒரு சமயம்....மகரிஷி துர்வாசருக்கு...குந்தி பணிவிடை செய்ய...அதனால் மனம் மகிழ்ந்த ரிஷி..அவளுக்கு ஒரு மந்திரத்தை அருளினார்.அதை உச்சரித்தால்...வேண்டிய தெய்வம் தோன்றி அருள் பாலிக்கும் என்றார்.

மந்திரத்தை சோதிக்க எண்ணிய குந்தி...ஒருநாள் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை ஓத...சூரியனும் தோன்றி..அவளுக்கு மகப்பேறு அளித்தான்.இந்நிகழ்ச்சிக்குப்பின் அஞ்சி அக்குழந்தையை..ஒரு பெட்டியில் வைத்து கங்கை ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி.பின் சூரிய பகவான் அருளால் மீண்டும் கன்னியானாள்.இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது..ஆற்றில் விடப்பட்ட குழந்தையே பின்னர் கர்ணன் என புகழப்பட்டவன்.

கண்பார்வை இல்லாததால்..திருதராட்டிரன்..அரசாளும் தகுதியை இழந்தான்.பின் பீஷ்மர் பாண்டுவை அரியணையில் அமர்த்தி..அவனுக்கு முடி சூட்னார்.திருதிராட்டிரன் பெயரளவில் மன்னனாய் இருந்தான்.பாண்டுவிற்கு...மணம் முடிக்க நினைத்தார் பீஷ்மர்..குந்தியின் சுயம்வரத்தில்..குந்தி பாண்டுவிற்கு மாலை சூட்டினாள்.

சில காலத்திற்குப் பிறகு..மந்திர நாட்டு மன்னன் மகளும், சல்லியனின் தங்கையுமான மாத்ரி என்பவள் பாண்டுவிற்கு இரண்டாம் மனைவி ஆனாள்.

விதுரர்...தேவகன் என்னும் மன்னனின் மகளை மணம் புரிந்தார்.

இவ்வாறு..மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் நிறைவேறியது.

No comments:

Post a Comment