Monday, February 16, 2009

18 - திரௌபதியின் சுயம்வரம்

மாறு வேடத்துடன் ஏகசக்கர நகரத்தில் தங்கியிருந்த பாண்டவர்களுக்குப் பாஞ்சாலத்தில் நடைபெற உள்ள திரௌபதியின் சுயம்வரம் பற்றி செய்தி கிடைத்தது.உடன் அவர்கள் பாஞ்சால தலைநகரமான
காம்பிலியாவிற்கு செல்ல நினைத்தனர்.அப்போது..அவர்கள் முன் வியாசர் தோன்றி..'உங்களுக்கு நல்ல காலம் வருகிறது..அந்த நகரத்திற்கு செல்லுங்கள்' என ஆசி கூறி சென்றார்.

குந்தியும் பாண்டவர்களும்..பாஞ்சாலம் சென்று ஒரு குயவன் வீட்டில் தங்கினர்.

சுயம்வரத்தன்று..பல நாட்டு மன்னர்கள் வந்திருந்தனர்.பாண்டவர்கள் அந்தணர்களுக்கான இடத்தில்..தனித் தனியாக அமர்ந்தனர்.கண்ணனும்,பலராமனும் அவையில் இருந்தனர்.

திரௌபதி..மாலையுடன்...தேவதை போல மண்டபத்திற்குள் வந்தாள்.சுயம்வரம் பற்றி..திட்டத்துய்மன் விளக்கினான்.

'அரசர்களே! இதோ..வில்லும்..அம்புகளும் உள்ளன.துவாரத்துடன் கூடிய சக்கரம் மேலே சுழன்றுக் கொண்டிருக்கிறது.அதற்கும் மேலே..மீன் வடிவத்தில் ஒரு இலக்கு இருக்கிறது.அதன் நிழல் கீழே உள்ள
தண்ணீரில் உள்ளது.இந்த நிழலைப் பார்த்தவாறு..மேலே உள்ள மீன் இலக்கை சுழலும் சக்கரத்தின் துவாரம் வழியே..அம்பை செலுத்தி வீழ்த்த வேண்டும்.அப்படி வீழ்த்துவோர்க்கு திரௌபதி மாலையிடுவாள்' என்றான்.

பல அரசர்கள் முயன்று தோற்றனர்.,தோற்றவர் பட்டியலில்..ஜராசந்தன்,சிசுபாலன்,சல்லியன்,கர்ணன்,துரியோதனன்..ஆகியோர் அடங்குவர்.

மன்னர்கள் யாரும் வெற்றிப் பெறாததால்..திட்டத்துய்மன்..நிபந்தனையை தளர்த்தினான்.'போட்டியில்..மன்னர்கள் மட்டுமின்றி..யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம்.'.துருபதன் உள்ளத்தில் அர்ச்சுனன் கலந்துக் கொள்ளமாட்டானா..என்ற ஏக்கம் இருந்தது.(பாண்டவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பது அவன் நம்பிக்கை)

அப்போது அந்தணர் கூட்டத்திலிருந்து ஒரு அந்தணன் எழுந்து நின்றான்.கண்ணன் உடன் அவன் அர்ச்சுனன் என்பதை தெரிந்து கொண்டார்.

அந்த வாலிபன் நேராக வந்து..மீன் வடிவ இலக்கை வீழ்த்த..திரௌபதி அவனுக்கு மாலையிட்டாள்.

திரௌபதியுடன் பாண்டவர்கள் வீடு திரும்பினர்.தாங்கள் கொண்டுவந்த பிட்சைப் பற்றி..வீட்டினுள் இருந்த குந்தியின் காதில் விழுமாறு கூறினர்.

குந்தியும்..கொண்டுவந்ததை..ஐவரும் பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்றாள்.குந்தி வெளியே வந்து பார்த்த போதுதான்..திரௌபதியைக் கண்டாள்.மனக்குழப்பம் அடைந்தாள்.

யுடிஷ்டிரர்'அர்ச்சுனனே..குந்தியை மணக்கட்டும்' என்றார்.ஆனால்..தாய் சொல்லை தட்டாத அர்ச்சுனன் 'திரௌபதி ஐவருக்கும் உரியவள்' என்றான்.

தாயின் சொல்லையும்..ஊழ்வினையின் பயனையும் எண்ணி..அனைவரும் இதற்கு உடன்பட..குழப்பம் தீர்ந்தது.

No comments:

Post a Comment