Monday, February 9, 2009

15 - துரியோதனின் சதி

திருதிராட்டிரன் பார்வையற்றவனாய் இருந்த படியால்...குருகுலத்து ஆட்சியை..பாண்டுவே நடத்தி வந்தான் என்பதால்...பாண்டு புத்திரர்களிடம் மக்களுக்கு நாட்டம் அதிகம் இருந்தது.இச்சமயத்தில் அஸ்தினாபுரத்து அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டன.அரசகுமாரர்களில் யுதிஷ்டிரர் மூத்தவர் ஆனபடியால்...இளவரசர் பட்டத்துக்கு அவரே..உரியவர் ஆனார்.பீஷ்மர்,துரோணர்,விதுரர் ஆகியோர்..யுதிஷ்டிரரை இளவரசர் ஆக்கினர்.

இவர் சத்தியத்திற்கும்,பொறுமைக்கும்..இருப்பிடமாக இருந்தார்.அவரது தம்பிகளும்..நாட்டின் எல்லை விரிவடைய உதவினர்.பாண்டவர்கள் உயர்வு கண்டு...துரியோதனன் மனம் புழுங்கினான்.விரைவில் யுதிஷ்டிரர் நாட்டுக்கு மன்னன் ஆகிவிடுவாரோ என எண்னினான்.தன் மனக்குமுறலை சகுனியிடமும்,துச்சாதனனிடமும்,கர்ணனிடமும் வெளிப்படுத்தினான்.

அதற்கு சகுனி, 'பாண்டவர்களை சூதில் வெல்லலாம்' என்றான்.நீண்ட யோசனைக்குப் பிறகு..எப்படியாவது பாண்டவர்களை அஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்ற தீர்மானித்தனர்.

துரியோதனன்..தன் தந்தையிடம் சென்று..'தந்தையே..யுதிஷ்டிரனை..இளவரசனாக நியமித்து..தவறு செய்து விட்டீர்.அதனால்...பாண்டவர் இப்போது..ஆட்சியுரிமைக்கு..முயல்கின்றனர்.ஆகவே
என்மீதும், தம்பியர் மீதும்..உங்களுக்கு அக்கறை இருக்குமேயாயின்,பாண்டவர்களை சிறிது காலமாவது ..வேறு இடம் செல்லக் கூறுங்கள்' என்றான்.

அவன் மேலும் கூறினான்..'கதா யுத்தத்தில்..என்னை பீமன் தாக்கிய போதும், எங்கள் சார்பில் யாரும் பேசவில்லை. பாட்டனாரும்,துரோணரும்,கிருபரும் கூட மனம் மாறி பாண்டவர் பக்கம் போனாலும்
போவார்கள்.விதுரர்..பாண்டவர் பக்கமே..இப்போதே..பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.அதன் பின் மக்களை நம் பக்கம் திருப்பி..நம் ஆட்சியை நிலை பெறச் செய்யலாம்' என்றான்.

மகனைப்பற்றி நன்கு அறிந்த திருதிராட்டிரன்..அவனுக்கு பல நீதிகளைக் கூறி..'உனது துரோக எண்ணத்தை விட்டுவிடு' என்று அறிவுரை கூறினான்.

எந்த நீதியும்..துரியோதனன் காதில் விழவில்லை.கடைசியில் மகன் மீது இருந்த பாசத்தால்..பாண்டவர்களை வாரணாவதம் அனுப்ப ஒப்புக்கொண்டான்.துரியோதனன் மூளை குறுக்கு வழியில் வேலை செய்ய ஆரம்பித்தது.

அவன் நாட்டில் சிறந்த சிற்பியும்..அமைச்சனும் ஆன..புரோசனனைக் கொண்டு..வாரணாவதத்தில் ரகசியமாக அரக்கு மாளிகை ஒன்றை அமைக்க தீர்மானித்தான்..அது எளிதில் தீப்பற்றி எறியக்கூடியதாய் இருக்க வேண்டும்.அதில் குந்தியையும்.பாண்டவர்களையும் தங்கச் செய்து..அவர்கள் தூங்கும் போது..அம்மாளிகையை தீயிட்டு கொளுத்தி..அவர்களை சாம்பலாக்க வேண்டும் என்று தீர்மானித்து, புரோசனனைக் கூப்பிட்டு..வேண்டிய பொருள்களைக் கொடுத்து...அரக்கு மாளிகை அமைக்க வாரணாவதம் அனுப்பினான்.

No comments:

Post a Comment