Sunday, February 22, 2009

21.ஜராசந்தன் மறைவு

காண்டவவனம் தீப்பற்றி எரிந்து சாம்பல் ஆனாலும்..மயன் என்னும் அசுர சிற்பி மட்டும் தப்பிப்பிழைத்தான்.அவன் அர்ச்சுனனுக்கு தகுந்த கைமாறு செய்ய விரும்பினான்.அர்ச்சுனனும்.கண்ணனும்..செய்யும் உதவிக்கு கைமாற்றாக எதுவும் ஏற்பதில்லை என்றனர்.

மயன்..யுதிஷ்டிரரை அணுகி "தான் ஒரு அசுர சிற்பி என்றும்..தன்னால் உலகமே வியக்கும் ஒரு சபையை நிறுவ முடியும் என்றும்..அதை இந்திரபிரஸ்தத்தில் அமைக்க அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டினான்.அனுமதி கிடைத்தது.

மயன்..இமயமலைக்கு அப்பால் சென்று..பொன்னையும்,மணியையும்..இரத்தினங்களையும் கொண்டு வந்து சபா மண்டபம் அமைத்தான்.சுவர்களும்,தூண்களும் தங்கத்தால் அமைக்கப்பட்டன.அவற்றுள் இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன.பளிங்குகற்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.தடாகங்களில் தங்கத்தாமரை மலர்கள்..சுற்றிலும்..செய்குன்றுகளும்..நீர்வீழ்ச்சிகளும் காணப்பட்டன.தரை இருக்குமிடம்,நீரிருக்குமிடம் போலவும்...நீர் இருக்குமிடம் தரை போலவும் அமைத்திருந்தான்.பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர்.

அம்மண்டபத்தை பார்வையிட்ட நாரதர் "மூவுலகிலும் இதற்கு இணையான மண்டபத்தை பார்க்கவில்லை" என்றார்.மேலும் யுத்ஷ்டிரரிடம் இராஜசூய யாகம் செய்யச்சொன்னார்.

இராஜசூய யாகம் செய்ய சில தகுதிகள் வேண்டும்..பிறநாட்டு மன்னர்..அந்த மன்னனின் தலைமையை ஏற்கவேண்டும்.

அதனால் கிருஷ்ணன் யுதிஷ்டிரரிடம்"மகத நாட்டு மன்னன் ஜராசந்தன்.உன் தலைமையை ஏற்கமாட்டான்.அவன் ஏற்கனவே 86 நாட்டு அரசர்களை வென்று சிறைப்படுத்தியிருக்கிறான்.மேலும்..14 பேரை சிறைப்படுத்தி..அவர்களைக்கொல்வதே அவன் திட்டம்.நீ அவனை வென்றால்..சக்கரவர்த்தி ஆகலாம்:" என்றார்.

மாயாவியான ஜராசந்தனைக் கொல்ல பீமனை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.இரு வீரர்களும் கடுமையாக மோதினர்.பீமன் ஜராசந்தனை...பனைமட்டையை கிழித்தெறிவதுபோல இறண்டாக கிழித்தெறிந்தான்...மாயக்காரனான ஜராசந்தன்..மீண்டும் உயிர் பெற்று போர்புரிந்தான்.பீமன் களைப்புற்று என்ன செய்வது என அறியாது திகைத்தான்.

கண்ணன்..ஜராசந்தனை இரண்டாக கிழித்து கால்மாடு..தலைமாடாகப் போடுமாறு செய்கை செய்தார்.(மாடு- பக்கம் ) .பீமனும் அவ்வாறே செய்ய ஜராசந்தன் அழிந்தான்.சிறையில் இருந்த மன்னர்கள் விடுதலை அடைந்தனர்.யுதிஷ்டிரர் மன்னாதி மன்னனாக ஆனான்.

No comments:

Post a Comment