Thursday, February 12, 2009

17 - கடோத்கஜன் பிறந்தான்

வாராணாவதத்து மாளிகையிலிருந்து தப்பியவர்கள் காட்டில் அலைந்து திரிந்தனர்.மேலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் குந்தி இருந்தாள்.பீமன் அனைவருக்கும் தண்ணீர் கொண்டுவர..தேடிச் சென்றான்.அவன் தண்ணீரைக் கொண்டு வந்த போது..தாயும்..சகோதரர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால்..பீமன் அவர்களுக்கு காவல் காத்து விழித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் தங்கியிருந்த காடு இடிம்பன் என்னும் அரக்கனுக்கு சொந்தமானதாகும்.இடிம்பன் காட்டில்..மனித வாடை வீசுவது அறிந்து..அவர்களைக் கொன்று..தனக்கு உணவாக எடுத்து வரும்படி..தன் தங்கை..இடிம்பைக்கு கட்டளை இட்டான்.

அழகிய பெண் வேடம் போட்டி வந்த இடிம்பை..அங்கு பீமனைக் கண்டு..அவன் மேல் காதல் கொண்டாள்.பீமனோ..தன் தாய்..சகோதரர் அனுமதி இல்லாமல் அவளை மணக்க முடியாது என்றான்.

நேரமானபடியால்..தங்கையைத் தேடி இடிம்பன்..அங்கே வந்தான்.பீமனைக் கண்டதும்..அவனுடன் கடுமையாக மோதினான்.அதில் இடிம்பன் மாண்டான்.

இடிம்பி..பீமனுடன் சென்று..குந்தியிடம்..பீமன் மீது தனக்குள்ள காதலை தெரிவித்தாள்.பின்..குந்தி..மற்ற சகோதரர்கள் சம்மதிக்க..பீமன் அவளை மணந்தான்.அவர்களுக்கு..கடோத்கஜன் என்ற மா வீரன் பிறந்தான்.பின்னால்..நடக்கும் பாரதப்போரில்..இவனுக்கு பெரும் பங்கு உண்டு.

பின்..பீமன்..இடிம்பியிடம்..தன்னைவிட்டு சிலகாலம் அவள் பிரிந்திருக்க வேண்டும் என்று கூற..அவளும் அவ்வாறே..மகனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

இந்நிலையில்..அவர்கள் முன்..வியாசர் ஒரு நாள் தோன்றி..கஷ்டங்களை சிறிது காலம் பொறுத்து
க் கொள்ள வேண்டும் என்றும்..அவர்கள் அனைவரையும் தவ வேடம் தாங்கிய பிராமணர்கள் போல ..ஏகசக்கர நகரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும்..நல்ல காலம் பிறக்கும் என்றும் நல்லாசி கூறினார்.

பின் பாண்டவர்கள் அந்தணர் வேடம் தாங்கி..ஒரு பிராமணர் வீட்டில் தங்கினர்.பகலில் வெளியே சென்று பிட்சை ஏற்று..கிடைத்ததை உண்டனர்.ஆனால்..அவர்கள் கோலத்தைக் கண்ட ஊரார்..இவர்கள் ஏதோ காரணத்துக்காக இப்படி இருக்கிறார்கள் என அறிந்து..தாராளமாகவே பிட்சை இட்டனர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஒரு நாள்..அழு குரல் கேட்க..அந்த ஊர் மக்கள் பகன் அன்னும் அசுரனால் துன்புறுவதாகவும்..அந்த ஊரில் ஒவ்வொருநாள் ஒரு வீட்டிலிருந்து உணவும்..நரபலியும் கொடுக்க வேண்டும் என்றும் அறிந்தனர் .அன்று அந்த வீட்டிலிருந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குந்தி..வண்டியில் உணவுடன்..பீமனை அனுப்புவதாகக் கூறி..அவளை அனுப்பினாள்.பீமன் சென்று..பகாசூரனை அழித்து..வண்டியில் அவன் உடலைப் போட்டு..ஊர்வலமாக வந்தான்.

எகசக்கர நகரம்..பகாசூரனின் கொடுமையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment