நகுலனின் பேச்சுத் துறவறத்தில் உள்ள துன்பத்தை விவரிக்கவும், அரசரின் கடமையை நினைவுபடுத்துவதாகவும் அமைய சகாதேவன் தருமரைப் பார்த்து'எனக்குத் தாயும், தந்தையும், குருவும் நீங்கள்தான்.உம் மீது உள்ள பக்தியால் இதை உரைக்கிறேன்.தவறாயின் மன்னிக்கவும்.உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோரையோ நண்பர்களையோ, வீடு முதலானவற்றையோ துறப்பது துறவு ஆகாது.இவை எல்லாம் புறப் பொருள்கள்.புறத்துறவு உண்மைத் துறவன்று.உள்ளத்தில் தோன்றும் அழுக்காறு அவா வெகுளி காமம் முதலிய தீய நினைவுகலைத் துறப்பதுதான் உண்மைத் துறவாகும்.இதனை அகத்துறவு என்பர்.
காலமெல்லாம் க்ஷத்திரிய சிந்தனையுடன் வாழ்ந்த உமக்கு எப்படி இந்த துறவு எண்ணம் வந்தது.துறவு என்பது ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே தோன்ற வேண்டும்.துக்கத்தில் தோன்றுவது துறவாகாது.சாது தருமத்தில் சிறிது தவறு நேரினும்..அடுத்த பிறவி பெரும் துன்பம் தரும் பிறவியாகி விடும்.அப்பிறவியிலிருந்து அடுத்தடுத்து நேரும் பிறவிகள் எப்படி யிருக்கும் என யாரால் சொல்ல முடியும்.ஆகவே நம் முன்னோர்கள் செல்லும் வழியிலேயே நாமும் செல்ல வேண்டும்.மற்ற யுகங்களைக் காட்டிலும் திரேதாயுகம் மிகச் சிறந்த யுகமாகும்.அந்த யுகத்திலே தோன்றிய அரசர்கள் இந் நில உலகில் நன்கு ஆட்சி புரிந்தனர்.தீமையை ஒழித்து நன்மையை நிலை நிறுத்தினர்.இதைவிட அரச தருமம் வேறென்ன உண்டு.எனவே..நீரும் நம் முன்னோர் சென்ற வழியில் நாடாள வேண்டும்' என்றான்.
தம்பியரின் உரைகள் தருமரை மாற்றவில்லை..இந்நிலையில் திரௌபதி தருமரை நோக்கி..
உம் தம்பியர் உமது துயர் கண்டு வருந்துகின்றனர்.அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டியது உமது கடமை.முன்னர் காட்டில் வாழ்ந்த போது தாங்கள் கூறியது என்ன.'என் அருமை தம்பியரே! பொறுங்கள்..நம் துன்பங்கள் விரைவில் தீரும்.நாம் கொடியவனான துரியோதனனைக் கொன்று நாட்டை மீட்போம்.' என்று கூறினீர்கள்.எனக்கு ஆறுதல் சொன்னீர்.அப்படிப் பேசிய நீங்கள் தற்போது ஏன் எங்கள் அனைவருக்கும் துன்பம் தரும் சொற்களைக் கூறுகிறீர்.
தைரியம் இல்லாதவரால் நாட்டை ஆள முடியாது.நீதி தெரியா அரசர் புகழ் பெற முடியாது.அவரது நாட்டு குடி மக்களும் நிம்மதியாக வாழ முடியாது.நல்ல அரசன் உலகில் சூரிய சந்திரர்களின் ஆற்றலைப் பெற்றவன்.நெருப்பு நெருங்கிய பொருளைத்தான் சுடும்.ஆனால் அரச தண்டனையோ தீமை எங்கிருந்தாலும் அழித்துவிடும்.உமது சினத் தீ திருதிராட்டிரனின் குலத்தையே சுட்டெரித்து விட்டது.
உலகம் தூங்குகையில் அரச நீதி விழித்துக் கொண்டிருக்கும்.அப்படி நீதி செலுத்தும் அரசனைத் தேவரும் போற்றுவர்.அரசன் தண்டிப்பான் என்பதாலேயே தீமை செய்வோர் அடங்கியுள்ளனர்.அரசரிடத்தில் அச்சம் இல்லையெனில் அனைத்து நாட்டு நன்மைகளும் சிதறிப் போகும்.குற்றம் செய்பவர் தப்பிக்க முடியாது என்ற அச்சம் ஒவ்வொருத்தர் உள்ளத்திலும் இருக்க வேண்டும்.இந்த உணர்வு அல்லாதார் தண்டிக்கப் படுவர்.
தருமத்தை விட்டு விலகியதால் தான் திருதிராட்டினனின் புதல்வர்கள் கொல்லப்பட்டனர்.அதனால் நீர் வருந்த வேண்டாம்.தீயவர்களை தண்டிப்பதும்..நல்லவர்களைக் காப்பதும் ,போர்க்களத்திலிருந்து ஓடாமல் இருப்பதும் முக்கிய தருமங்கள் ஆகும்.இந்நாட்டை ஆளும் உரிமையை யாரிடமும் யாசித்துப் பெறவில்லை.
குந்திதேவியார் அன்று சொன்னது என்ன 'திரௌபதி உனக்கும் நல்ல காலம் வரும்.என் மகன் தருமன் உன் துயரைத் தீர்க்கப் போகிறான்.' என்றாரே..அது பொய் ஆகுமா?உலகில் உள்ள பெண்கள் அனைவரினும் நான் கீழானவள்.திருதிராட்டிரனனின் மகன்களால் அடைந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு இன்னும் உயிருடன் இருக்கின்றேனே..இதைவிடக் கீழ்மை என்ன இருக்கப் போகிறது.அந்த மா பாவிகளை கொன்றதில் என்ன தவறு.
தற்கொலை செய்து கொள்பவன்,தன் பொருளை அழிப்பவன்.உறவினனைக் கொல்பவன்,விஷம் வைப்பவன்,காரணமின்றி பிறரைக் கொல்பவன்,பிறன் மனைவியை இழுப்பவன் ஆகிய இந்த அறுவரும் ஆததாயிகள் எனப்படுவர்.இவர்களைக் கொல்வது கொலைக் குற்றமாகாது..என்று பிரம தேவர் பார்க்கவரிடம் சொன்னதை மறந்து விட்டீரா? அரசவையில் என்னை இழுத்து வந்து மானபங்கம் செய்த பாவிகளைக் கொன்றது குற்றமல்ல.அதற்கான தண்ட நீதியை செலுத்திய நீர் கோழைகளைப் போல் நடந்துக் கொள்ளக் கூடாது.கவலையை விட்டொழித்துத் தம்பியருடன் நல்லாட்சி செய்வீராக.." என்று அரச நீதியை நினைவுப் படுத்தினாள்.
Monday, February 8, 2010
Sunday, January 24, 2010
84-நகுலனின் பேச்சு
அர்ச்சுனனின் பேச்சைத் தொடர்ந்து நகுலன் தருமரிடம் கூறலானான்
"இல்லறக் கடமைகளை ஒழுங்காகச் செய்ததால்தான் தேவர்களுக்கு அந்த பிறப்புக் கிடைக்கிறது.இன்றும் அவர்களுக்கு மண்ணில் வாழ்வோர் மீது உள்ள அக்கறையைப் பாருங்கள்.இங்கு இருக்கும் உயிர்களின் உணவிற்காக மழையைத் தருகிறார்கள்.அதுபோல உலக உயிர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.அர்ச்சுனனால் கூறப்பட்ட அந்தப் பிராமணர்கள் வேத நெறியைக் கைவிட்ட நாத்திகர்கள்.வேதத்தில் கூறப்பட்ட இல்லறக் கடைமைகளைத் துறந்து விட்டு யாரும் பிரமலோகத்தை அடைய முடியாது.இல்லற தருமம் மற்றெல்லா தருமத்தையும் விட சிறந்தது என உயர்ந்தோர் சொல்கின்றனர்.இல்லறம் துறந்து காடு செல்பவன்..வேறு ஒரு சமயத்தில் வீட்டைப் பற்றி எண்ணுவானானால் அவனை விட வேடதாரி இல்லை எனலாம்.
அறவழியில் பெற்ற செல்வத்தைப் பல யாகங்கள் மூலம் தானம் செய்பவனே..உண்மையில் மனதை வென்றவன்.அவனே உண்மையான தியாகி.இல்லற தருமம் என்னும் இத் தருமத்தில் தான் அறம்,பொருள்,இன்பம் என்னும் மூவகைப் பயனும் உண்டு.
ஆகவே..அரசே..இந்திரனுக்கு இணையான நீர் ராஜசூயம்,அசுவமேதம் முதலான யாகங்களைச் செய்வீராக.நாடெங்கும் திருடர்களால் துன்பம் அடையும் மக்களைக் காக்காத வேந்தன் சனியின் வடிவம் என பழிக்கப்படுவான்.நாட்டாட்சியை நல்ல முறையில் செயல்படுத்தாத நாம் துன்பத்தைத்தான் அடைவோமே தவிர ஒரு போதும் இன்பம் அடைய மாட்டோம்.
எனவே..கிடைத்த வாய்ப்பை விட்டு துறவை மேற்கொள்வீராயின் இம்மை மறுமை ஆகிய இருமையும் இழந்து மேலும் துன்பம் அடைய நேரிடும்.போர்க்களத்தை நாம் வலிமையினால் வென்றோம்..இனி நல்லாட்சி தருவது நம் கடமை ஆகும்.ஆகவே..அரச தருமப்படி நாட்டை ஆண்டு மேலான பதத்தை அடைய வேண்டிய நீர் இப்படிச் சோகத்தில் மூழ்குவது நன்றன்று'
இவ்வாறு நகுலன் தன் கருத்தைக் கூற..அவனைத் தொடர்ந்து சகாதேவன் கூறலானான்.
"இல்லறக் கடமைகளை ஒழுங்காகச் செய்ததால்தான் தேவர்களுக்கு அந்த பிறப்புக் கிடைக்கிறது.இன்றும் அவர்களுக்கு மண்ணில் வாழ்வோர் மீது உள்ள அக்கறையைப் பாருங்கள்.இங்கு இருக்கும் உயிர்களின் உணவிற்காக மழையைத் தருகிறார்கள்.அதுபோல உலக உயிர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.அர்ச்சுனனால் கூறப்பட்ட அந்தப் பிராமணர்கள் வேத நெறியைக் கைவிட்ட நாத்திகர்கள்.வேதத்தில் கூறப்பட்ட இல்லறக் கடைமைகளைத் துறந்து விட்டு யாரும் பிரமலோகத்தை அடைய முடியாது.இல்லற தருமம் மற்றெல்லா தருமத்தையும் விட சிறந்தது என உயர்ந்தோர் சொல்கின்றனர்.இல்லறம் துறந்து காடு செல்பவன்..வேறு ஒரு சமயத்தில் வீட்டைப் பற்றி எண்ணுவானானால் அவனை விட வேடதாரி இல்லை எனலாம்.
அறவழியில் பெற்ற செல்வத்தைப் பல யாகங்கள் மூலம் தானம் செய்பவனே..உண்மையில் மனதை வென்றவன்.அவனே உண்மையான தியாகி.இல்லற தருமம் என்னும் இத் தருமத்தில் தான் அறம்,பொருள்,இன்பம் என்னும் மூவகைப் பயனும் உண்டு.
ஆகவே..அரசே..இந்திரனுக்கு இணையான நீர் ராஜசூயம்,அசுவமேதம் முதலான யாகங்களைச் செய்வீராக.நாடெங்கும் திருடர்களால் துன்பம் அடையும் மக்களைக் காக்காத வேந்தன் சனியின் வடிவம் என பழிக்கப்படுவான்.நாட்டாட்சியை நல்ல முறையில் செயல்படுத்தாத நாம் துன்பத்தைத்தான் அடைவோமே தவிர ஒரு போதும் இன்பம் அடைய மாட்டோம்.
எனவே..கிடைத்த வாய்ப்பை விட்டு துறவை மேற்கொள்வீராயின் இம்மை மறுமை ஆகிய இருமையும் இழந்து மேலும் துன்பம் அடைய நேரிடும்.போர்க்களத்தை நாம் வலிமையினால் வென்றோம்..இனி நல்லாட்சி தருவது நம் கடமை ஆகும்.ஆகவே..அரச தருமப்படி நாட்டை ஆண்டு மேலான பதத்தை அடைய வேண்டிய நீர் இப்படிச் சோகத்தில் மூழ்குவது நன்றன்று'
இவ்வாறு நகுலன் தன் கருத்தைக் கூற..அவனைத் தொடர்ந்து சகாதேவன் கூறலானான்.
Wednesday, January 6, 2010
83-பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்
பீமன் தருமரைப் பார்த்து 'நீங்கள் உண்மையை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை..ராஜ தர்மத்தையே கொச்சைப் படுத்துகிறீர்.ராஜ தருமத்தில் உங்களுக்கு ஏன் அருவெறுப்பு? இப்படி நீங்கள் சொல்வீர்கள் எனத் தெரிந்திருந்தால்..நாங்கள் போர்க்கருவிகளையே எடுத்திருக்க மாட்டோம்.யாரையும் கொன்றிருக்கமாட்டோம்.இந்தப் போரே நடந்திராது.காலமெல்லாம் நாம் பிச்சை எடுத்திருப்போம்.இவ்வுலகு வலிமையுள்ளவர்களுக்கே சொந்தம் என மேலோர் கூறியுள்ளனர்.நம்ம பகைவர்களைத் த்ரும நெறிப்படி கொன்றோம்.வெற்றி பெறற நாட்டை அனுபவித்தல்தான் முறை.
பெரிய மரத்தில் ஏறி அரும்பாடுப்பட்டு கொணர்ந்த தேனைப் பருகாது..மரணம் அடைவது போல இருக்கிறது உமது செயல்.பகைவனைக் கொன்றுவிட்டு..தற்கொலை செய்துக் கொல்வது போல இருக்கிரது உங்க செயல்.உம்மைச் சொல்லிக் குற்றமில்லை.மந்த புத்தியுள்ள உங்கள் பேச்சைக் கேட்ட நாங்கள்தான் நிந்திக்கத் தக்கவர்கள்.ஆற்றல் மிக்கவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் சீரிய சிந்தனை மிக்கவர்களான நாங்கள் ஆற்றல் அற்றவர்களைப் போல ஆண்மை அற்ற உம்முடைய சொற்களுக்கு கட்டுப்பட்டுக் கிடக்கின்றோம்.துறவு என்பது முதுமைக் காலத்தில் நிகழ்வது..க்ஷத்திரியர்கள் துறவு மேற் கொள்வதை மேலோர் விரும்புவதில்லை.போர்க்களமே அவர்கள் மோட்ச உலகம்.
உண்மை இவ்வாறு இருக்க உமது செயல் க்ஷத்திரிய தருமத்தை நிந்திப்பது போல இருக்கிறது.பொருளற்றவர்களே துறவறத்தை நாடுவர்.துறவு மேற்கொள்பவர்கள் மேலும் பிறர் துன்பத்தை சுமப்பதில்லை தமது சுற்றம்,விருந்தினர்,ரிஷிகள் இவர்களைக் கவனிக்காமல் காடுகளில் திரிந்து சுவர்க்கம் அடைய முடியுமானால் ..காட்டிலேயே பிறந்து..காட்டிலேயே வளர்ந்த விலங்குகள் ஏன் சுவர்க்கம் அடையவில்லை.இரண்டுவேளை நீராடினால் முக்தி கிடைக்குமெனில்..எந்நேரமும் நீரில் கிடக்கும் மீன்கள் ஏன் முக்தியை அடையவில்லை?ஒரு பொருளிலும் பற்றற்று அசையாது நிறபதன் மூலம் முக்தி அடையலாம் என்றால் உயர்ந்த மலைகளும்..ஓங்கி வளர்ந்த மரங்களும் ஏன் முக்தி அடையவில்லை?ஒவ்வொருவரும் தன் கடமைகளை செய்ய வேண்டும்.தம் கடமையை மறந்தவனுக்கு முக்தி கிடைக்காது' என்றான்.
பின் மீண்டும் அர்ச்சுனன் தருமரைப் பார்த்து..'துறவறம் சிறந்ததா..இல்லறம் சிறந்ததா என்பதை அறிந்து கொள்ள முன்பு ஒரு புறாவிற்கும்,துறவிகளுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சான்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர்.நல்ல குலத்தில் பிறந்த சிலர் துறவு வாழ்க்கை மேலானது எனக் கருதித் தாய் தந்தையரையும்,சுற்றத்தாரையும்,பிறந்த வீட்டையையும்,உடமைகளையும் துறந்து காடு சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டனர்.அவர்களிடம் கருணை கொண்ட இந்திரன் ஒரு புறா உருவில் வந்தான்.விகசத்தை (ஹோமம் செய்து பிறருக்குக் கொடுத்தபின் மீதியிருக்கும் உணவு)உண்பவர்களே முக்தியடைவர் என்றது புறா.ஆனால் அந்த துறவிகள் விகசம் என்றால் காய்கறிகள் என தவறாகப் புரிந்து கொண்டனர்.
துறவிகளும்..தாங்கள் சரியான பாதையில் செல்வதாக மகிழ்ந்து 'பறவையே! உன் பாராட்டுக்கு நன்றி' என்றனர்.
உடன் புறா 'உங்களை நான் புகழவில்லை.நீங்கள் மூடர்கள்..நீங்கள் தெளிவு பெறச் சிலவற்றைக் கூறுகிறேன்.நாற்கால் பிராணிகளுள் சிறந்தது பசு..உலோகங்களில் தங்கம் சிறந்தது.ஒலிகளுள் வேதம் சிறந்தது..இரண்டுகால் பிராணிகளுள் வேதத்தை அறிந்தவன் சிறந்தவன்.ஒவ்வொருவனுக்கும் பிறப்பு முதல் இறப்புவரை பருவத்திற்கேற்பப் பல கருமங்கள் உள்ளன.தனக்குரிய கருமத்தைச் செய்பவன் புண்ணியப் பேறு பெறுவான்.குடும்பத்தில் தாய்,தந்தையர்,மனைவி,மக்கள்,விருந்தினர் ஆகியோரைக் கவனிக்க வேண்டும்.அவர்கள் உண்ட பின் எஞ்சிய உணவை உண்ன வேண்டும்.இந்த இல்லறக் கடமையை ஒழுங்காக நிறைவேற்றிய பின்னரே தவம் பற்றிய எண்ணம் வர வேண்டும்.அதன்பின் தேவகதி முதலான கதிகளைப் படிப்படியாகக் கடந்து இறுதியில் பிரம பதவி அடைய முடியும்.எனவே அறவோர் போற்றும் இல்லறக் கடமைகளை முதலில் மேற்கொள்வீராக' என்று கூறியது.
உண்மை உணர்ந்த துறவிகள் இல்லற தருமத்தை மேற்கொண்டனர்.ஆதலால் உமக்குரிய அரச தருமத்தை மேற்கொண்டு நல்லாட்சி புரிவீராக' என அர்ச்சுனன் கூறினான்.
பெரிய மரத்தில் ஏறி அரும்பாடுப்பட்டு கொணர்ந்த தேனைப் பருகாது..மரணம் அடைவது போல இருக்கிறது உமது செயல்.பகைவனைக் கொன்றுவிட்டு..தற்கொலை செய்துக் கொல்வது போல இருக்கிரது உங்க செயல்.உம்மைச் சொல்லிக் குற்றமில்லை.மந்த புத்தியுள்ள உங்கள் பேச்சைக் கேட்ட நாங்கள்தான் நிந்திக்கத் தக்கவர்கள்.ஆற்றல் மிக்கவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் சீரிய சிந்தனை மிக்கவர்களான நாங்கள் ஆற்றல் அற்றவர்களைப் போல ஆண்மை அற்ற உம்முடைய சொற்களுக்கு கட்டுப்பட்டுக் கிடக்கின்றோம்.துறவு என்பது முதுமைக் காலத்தில் நிகழ்வது..க்ஷத்திரியர்கள் துறவு மேற் கொள்வதை மேலோர் விரும்புவதில்லை.போர்க்களமே அவர்கள் மோட்ச உலகம்.
உண்மை இவ்வாறு இருக்க உமது செயல் க்ஷத்திரிய தருமத்தை நிந்திப்பது போல இருக்கிறது.பொருளற்றவர்களே துறவறத்தை நாடுவர்.துறவு மேற்கொள்பவர்கள் மேலும் பிறர் துன்பத்தை சுமப்பதில்லை தமது சுற்றம்,விருந்தினர்,ரிஷிகள் இவர்களைக் கவனிக்காமல் காடுகளில் திரிந்து சுவர்க்கம் அடைய முடியுமானால் ..காட்டிலேயே பிறந்து..காட்டிலேயே வளர்ந்த விலங்குகள் ஏன் சுவர்க்கம் அடையவில்லை.இரண்டுவேளை நீராடினால் முக்தி கிடைக்குமெனில்..எந்நேரமும் நீரில் கிடக்கும் மீன்கள் ஏன் முக்தியை அடையவில்லை?ஒரு பொருளிலும் பற்றற்று அசையாது நிறபதன் மூலம் முக்தி அடையலாம் என்றால் உயர்ந்த மலைகளும்..ஓங்கி வளர்ந்த மரங்களும் ஏன் முக்தி அடையவில்லை?ஒவ்வொருவரும் தன் கடமைகளை செய்ய வேண்டும்.தம் கடமையை மறந்தவனுக்கு முக்தி கிடைக்காது' என்றான்.
பின் மீண்டும் அர்ச்சுனன் தருமரைப் பார்த்து..'துறவறம் சிறந்ததா..இல்லறம் சிறந்ததா என்பதை அறிந்து கொள்ள முன்பு ஒரு புறாவிற்கும்,துறவிகளுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சான்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர்.நல்ல குலத்தில் பிறந்த சிலர் துறவு வாழ்க்கை மேலானது எனக் கருதித் தாய் தந்தையரையும்,சுற்றத்தாரையும்,பிறந்த வீட்டையையும்,உடமைகளையும் துறந்து காடு சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டனர்.அவர்களிடம் கருணை கொண்ட இந்திரன் ஒரு புறா உருவில் வந்தான்.விகசத்தை (ஹோமம் செய்து பிறருக்குக் கொடுத்தபின் மீதியிருக்கும் உணவு)உண்பவர்களே முக்தியடைவர் என்றது புறா.ஆனால் அந்த துறவிகள் விகசம் என்றால் காய்கறிகள் என தவறாகப் புரிந்து கொண்டனர்.
துறவிகளும்..தாங்கள் சரியான பாதையில் செல்வதாக மகிழ்ந்து 'பறவையே! உன் பாராட்டுக்கு நன்றி' என்றனர்.
உடன் புறா 'உங்களை நான் புகழவில்லை.நீங்கள் மூடர்கள்..நீங்கள் தெளிவு பெறச் சிலவற்றைக் கூறுகிறேன்.நாற்கால் பிராணிகளுள் சிறந்தது பசு..உலோகங்களில் தங்கம் சிறந்தது.ஒலிகளுள் வேதம் சிறந்தது..இரண்டுகால் பிராணிகளுள் வேதத்தை அறிந்தவன் சிறந்தவன்.ஒவ்வொருவனுக்கும் பிறப்பு முதல் இறப்புவரை பருவத்திற்கேற்பப் பல கருமங்கள் உள்ளன.தனக்குரிய கருமத்தைச் செய்பவன் புண்ணியப் பேறு பெறுவான்.குடும்பத்தில் தாய்,தந்தையர்,மனைவி,மக்கள்,விருந்தினர் ஆகியோரைக் கவனிக்க வேண்டும்.அவர்கள் உண்ட பின் எஞ்சிய உணவை உண்ன வேண்டும்.இந்த இல்லறக் கடமையை ஒழுங்காக நிறைவேற்றிய பின்னரே தவம் பற்றிய எண்ணம் வர வேண்டும்.அதன்பின் தேவகதி முதலான கதிகளைப் படிப்படியாகக் கடந்து இறுதியில் பிரம பதவி அடைய முடியும்.எனவே அறவோர் போற்றும் இல்லறக் கடமைகளை முதலில் மேற்கொள்வீராக' என்று கூறியது.
உண்மை உணர்ந்த துறவிகள் இல்லற தருமத்தை மேற்கொண்டனர்.ஆதலால் உமக்குரிய அரச தருமத்தை மேற்கொண்டு நல்லாட்சி புரிவீராக' என அர்ச்சுனன் கூறினான்.
Friday, December 25, 2009
82-தருமரின் உறுதி
அர்ச்சுனன் கூறிய காரணங்களை கேட்டும் தருமர் மனம் மாறவில்லை.துறவு மேற்கொள்ள இருக்கும் தன் முடிவில் மாற்றமில்லை என்றார்.அவர் அர்ச்சுனனிடம்..'நான் சொல்வதை உன் ஐம்புலன்களையும் ஒருமுகப் படுத்தி நான் சொல்வதைக் கேள்.அப்போது நான் சொல்வதில் உள்ள நியாயம் உனக்குப் புரியும்.முனிவர்கள் சேர்க்கையால் நான் மேலான நிலைமையை அடையப் போகிறேன்.நீ சொல்வதால் அரசாட்சியை நான் மேற்கொள்ளப் போவதில்லை.நான் காட்டுக்குச் செல்லப் போவது உறுதி.கானகம் சென்று கடுந்தவம் இருக்கப் போவது உறுதி.தவிர்க்க இயலாது.உலகப் பற்று நீங்கி முனிவர்களுடன் கூடி ஆத்ம சிந்தனையில் திளைப்பேன்.உடலை சாத்திரப்படி உண்ணாவிரதத்தால் இளைக்கச் செய்வேன்.இரண்டு வேளையும் நீராடுவேன்.காட்டில் உள்ள பறவை,விலங்குகளின் இனிய ஒலிகளைக் கேட்டு மனம் மகிழ்வேன்.தவம் செய்வோர் மேற்கொள்ளும் சாத்திர விதிப்படி பின்பற்றுவேன்.விருப்பு,வெறுப்பு,இன்ப துன்பம்,மான அவமானம் ஆகியவற்றிலிருந்து விலகி எப்போதும் தியானத்தில் இருப்பேன்.எனக்கு இனி நண்பரும் இல்லை..பகைவரும் இல்லை.
வாள் கொண்டு ஒருவர் கையை அறுத்தாலும் சரி,சந்தனத்தால் ஒருவர் அபிசேகம் செய்தாலும் சரி இருவருக்குமே தீங்கையோ, நன்மையையோ நினைக்க மாட்டேன்.இவ்வளவு நாள் இந்த புத்தி இல்லாமல்தான் சகோதரர்களைக் கொன்றேன்.பிறப்பு,இறப்பு,மூப்பு,நோய்,வேதனை இவைகளால் பீடிக்கப் படும் மனித வாழ்க்கையில் ஒரு பயனும் இல்லை.நிலையில்லா உலகில் தோன்றும் அற்ப ஆசைகளால் ஒரு அரசன் மற்ற அரசனைக் கொல்கிறான்.இவ்வளவு நாட்கள் அறிவு தெளிவற்றுக் கிடந்த நான் இப்போது தெளிந்த ஞானத்துடன் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்..என்றும் நிலைத்து நிற்கக் கூடிய முக்தியை அடையத் துணிந்து விட்டேன்' என்றார்.
பீமன் சத்திரியர் துறவு மேற்கொள்ளக்கூடாது என்றும் தருமர் அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறியவை அடுத்த பதிவில்...
வாள் கொண்டு ஒருவர் கையை அறுத்தாலும் சரி,சந்தனத்தால் ஒருவர் அபிசேகம் செய்தாலும் சரி இருவருக்குமே தீங்கையோ, நன்மையையோ நினைக்க மாட்டேன்.இவ்வளவு நாள் இந்த புத்தி இல்லாமல்தான் சகோதரர்களைக் கொன்றேன்.பிறப்பு,இறப்பு,மூப்பு,நோய்,வேதனை இவைகளால் பீடிக்கப் படும் மனித வாழ்க்கையில் ஒரு பயனும் இல்லை.நிலையில்லா உலகில் தோன்றும் அற்ப ஆசைகளால் ஒரு அரசன் மற்ற அரசனைக் கொல்கிறான்.இவ்வளவு நாட்கள் அறிவு தெளிவற்றுக் கிடந்த நான் இப்போது தெளிந்த ஞானத்துடன் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்..என்றும் நிலைத்து நிற்கக் கூடிய முக்தியை அடையத் துணிந்து விட்டேன்' என்றார்.
பீமன் சத்திரியர் துறவு மேற்கொள்ளக்கூடாது என்றும் தருமர் அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறியவை அடுத்த பதிவில்...
Wednesday, December 16, 2009
81- தருமருக்கு அர்ச்சுனனின் பதில்
தருமரின் மொழிகளைக் கேட்ட அர்ச்சுனன் பதில் கூற ஆரம்பித்தான்..
'செயற்கரிய செயலை முடித்து..அதனால் பெற்ற செல்வத்தை இழக்கக்கூடாது.உமது துயரம் என்னை வியக்க வைக்கிறது.பகைவரைக் கொன்று தருமத்தால் கிடைத்த பூமியை எப்படி விட்டுப் போவது?அஃது அறிவீனம்.பயமும்,சோம்பலும் உடையவர்க்கு ஏது அரச செல்வம்?உலகில் ஒன்றும் இல்லாதவன் தான் பிச்சை எடுத்து உண்பான்.அவன் முயற்சியால் செல்வத்தை பெற மாட்டான்.மிகப் பெரிய அரச செல்வத்தை விட்டு விட்டு பிச்சை எடுத்து தவம் மேற்கொள்ளப் போகிறேன் என்ற உமது பேச்சை யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? எல்லா நம்மைகளையும் விட்டு விட்டு அறிவிலி போல் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?அரும்பாடு பட்டு வெற்றி கொண்ட பின் ஏன் காடு நோக்கி செல்ல வேண்டும்?ஒன்றும் இல்லாமல் இருப்பது சாதுக்களுக்கு தருமம்.ஆனால் அரச தருமம் அல்ல.அரச தருமம் என்பது பொருளால் நடைபெறுவது.அரச தருமம் மட்டுமல்ல சாது தருமம் கூட பொருள் இல்லாது போனால் நிலைகுலைந்து விடும்.சாதுக்கள் சாது தருமத்தைக் காக்க இல்லறத்தார் துணை செய்வர்.பொருள் இல்லையெனில் இல்லறத்தாரால் எவ்வாறு சாதுக்களுக்கு உதவ முடியும்.எனவே உலகில் பொருள் இல்லாமை பாவம் ஆகும்.பல்வேறு வகைகளில் திரட்டப் படும் செல்வமே எல்லா நன்மைகளும் பெருக காரணமாகிறது.அண்ணலே..பொருளிலிருந்து இம்மை இன்பம் கிடைக்கிறது.தருமம் பிறக்கிறது.இறுதியில் மறுமை இன்பமும் கிடைக்கிறது.
உலக வாழ்க்கை பொருள் இல்லாது மேன்மையுறாது.பொருளற்றவனின் முயற்சி கோடைகால நீர்நிலை போல் வற்றிப் போகும்.ஒரு பயனும் தராது.எவனிடம் பொருள் உண்டோ அவனிடம் நண்பர்கள் இருப்பார்கள்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனுடன் நெருங்கிய சுற்றத்தார்கள் இருப்பர்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனே சிறந்த அறிஞன்.அவனே தலைவன்.ஆகவே..யானையைக்கொண்டு யானையைப் பிடிப்பது போலப் பொருளைக் கொண்டு பொருளை சேர்க்க வேண்டும்.மலையிலிருந்து நதிநீர் பெருகுவதுப் போல பொருளில் இருந்து தான் தருமம் பெருகுகிறது.உண்மையில் உடல் இளைத்தவன் இளைத்தவன் அல்ல.பொருளற்றவனே இளைத்தவன் ஆவான்.
பகை அரசரின் நாட்டைக் கவர்வது அரச நீதி.அரச வம்சத்தை ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.ஒரு காலத்தில் இந்தப் பூமி திலீபனுடையதாக இருந்தது.பின் நகுஷன் கைக்குப் போனது.பின் அம்பரீஷனுடையதாகியது.பின் மாந்தாவுக்குச் சொந்தம் ஆனது.தற்போது உம்மிடம் உள்ளது.எனவே முன்னோர்களைப் போல அரச நீதி உணர்ந்து நீர் ஆட்சி புரிய வேண்டுமேயன்றிக் காட்டுக்குப் போகிறேன்..என்று சொல்லக் கூடாது'
என்று அர்ச்சுனன் சொல்லி முடித்தான்.
'செயற்கரிய செயலை முடித்து..அதனால் பெற்ற செல்வத்தை இழக்கக்கூடாது.உமது துயரம் என்னை வியக்க வைக்கிறது.பகைவரைக் கொன்று தருமத்தால் கிடைத்த பூமியை எப்படி விட்டுப் போவது?அஃது அறிவீனம்.பயமும்,சோம்பலும் உடையவர்க்கு ஏது அரச செல்வம்?உலகில் ஒன்றும் இல்லாதவன் தான் பிச்சை எடுத்து உண்பான்.அவன் முயற்சியால் செல்வத்தை பெற மாட்டான்.மிகப் பெரிய அரச செல்வத்தை விட்டு விட்டு பிச்சை எடுத்து தவம் மேற்கொள்ளப் போகிறேன் என்ற உமது பேச்சை யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? எல்லா நம்மைகளையும் விட்டு விட்டு அறிவிலி போல் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?அரும்பாடு பட்டு வெற்றி கொண்ட பின் ஏன் காடு நோக்கி செல்ல வேண்டும்?ஒன்றும் இல்லாமல் இருப்பது சாதுக்களுக்கு தருமம்.ஆனால் அரச தருமம் அல்ல.அரச தருமம் என்பது பொருளால் நடைபெறுவது.அரச தருமம் மட்டுமல்ல சாது தருமம் கூட பொருள் இல்லாது போனால் நிலைகுலைந்து விடும்.சாதுக்கள் சாது தருமத்தைக் காக்க இல்லறத்தார் துணை செய்வர்.பொருள் இல்லையெனில் இல்லறத்தாரால் எவ்வாறு சாதுக்களுக்கு உதவ முடியும்.எனவே உலகில் பொருள் இல்லாமை பாவம் ஆகும்.பல்வேறு வகைகளில் திரட்டப் படும் செல்வமே எல்லா நன்மைகளும் பெருக காரணமாகிறது.அண்ணலே..பொருளிலிருந்து இம்மை இன்பம் கிடைக்கிறது.தருமம் பிறக்கிறது.இறுதியில் மறுமை இன்பமும் கிடைக்கிறது.
உலக வாழ்க்கை பொருள் இல்லாது மேன்மையுறாது.பொருளற்றவனின் முயற்சி கோடைகால நீர்நிலை போல் வற்றிப் போகும்.ஒரு பயனும் தராது.எவனிடம் பொருள் உண்டோ அவனிடம் நண்பர்கள் இருப்பார்கள்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனுடன் நெருங்கிய சுற்றத்தார்கள் இருப்பர்.எவனிடம் பொருள் இருக்கிறதோ அவனே சிறந்த அறிஞன்.அவனே தலைவன்.ஆகவே..யானையைக்கொண்டு யானையைப் பிடிப்பது போலப் பொருளைக் கொண்டு பொருளை சேர்க்க வேண்டும்.மலையிலிருந்து நதிநீர் பெருகுவதுப் போல பொருளில் இருந்து தான் தருமம் பெருகுகிறது.உண்மையில் உடல் இளைத்தவன் இளைத்தவன் அல்ல.பொருளற்றவனே இளைத்தவன் ஆவான்.
பகை அரசரின் நாட்டைக் கவர்வது அரச நீதி.அரச வம்சத்தை ஆராய்ந்தால் இதன் உண்மை விளங்கும்.ஒரு காலத்தில் இந்தப் பூமி திலீபனுடையதாக இருந்தது.பின் நகுஷன் கைக்குப் போனது.பின் அம்பரீஷனுடையதாகியது.பின் மாந்தாவுக்குச் சொந்தம் ஆனது.தற்போது உம்மிடம் உள்ளது.எனவே முன்னோர்களைப் போல அரச நீதி உணர்ந்து நீர் ஆட்சி புரிய வேண்டுமேயன்றிக் காட்டுக்குப் போகிறேன்..என்று சொல்லக் கூடாது'
என்று அர்ச்சுனன் சொல்லி முடித்தான்.
Tuesday, December 8, 2009
80-தருமரின் துயரம்
போர்க்களத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களை எண்ணி தருமர் சோகமாகக் காணப்பட்டார்.சகோதரர்களையும்,சுற்றத்தாரையும் இழந்து பெற்ற பயன் என்ன என ஏங்கினார்.அர்ச்சுனனைக் கூப்பிட்டு தருமர் சொல்ல ஆரம்பித்தார்.
'நாம் காட்டிலேயே இருந்திருந்தால் துயரம் இருந்திருக்காது. நம் சகோதரர்களைக் கொன்றதால் என்ன நன்மை..வனத்தில் இருந்த போது நம்மிடம் பொறுமை இருந்தது.அடக்கம் இருந்தது,அஹிம்சை இருந்தது.இவையே தருமம்.அறிவின்மையாலும்,ஆணவத்தினாலும்,பொருளாசையாலும் அரசாட்சியில் உள்ள கஷ்டத்தை விரும்பி துயரத்தை அடைந்தோம்.எல்லோரையும் கொன்றுவிட்டு கேவலமாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.நம்மால் கொல்லப்பட்டவர்கள் மரணம் என்னும் வாயிலில் புகுந்து யமனின் மாளிகையை அடைந்து விட்டார்கள்.நன்மைகளை விரும்பும் தந்தைகள் அறிவுள்ள மக்களைப் பெற விரும்புகின்றனர்.தாய்மார்கள் விரதங்களும், தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.மகனையோ,மகளையோ பெற்று அவர்கள் நல்லபடியாக கௌரவத்துடனும்,செயல்திறனுடனும் புகழுடன் வாழ்வார்களாயின் தமக்கு இம்மையிலும்,மறுமையிலும் நற்பேறு கிட்டும் என பெற்றோர் எண்ணுகின்றனர்.இங்கே அவர்கள் நனவு கனவாயிற்று.அவர்கள் வாழ்க்கையும் பாலைவனம் போல் ஆயிற்று.அவர்களின் பிள்ளைகள் நம்மால் கொல்லப்பட்டார்கள்.அவர்கள் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமை நம்மால் தடுக்கப்பட்டது.
ஆசையும், சினமும் மிக்கவர்கள் வெற்றியின் பயனை அடைய முடியாது.இதில் கௌரவர்களும்..நாமும் ஒன்றுதான்.இந்த பூமியின் பயனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை.ஆசைவயப்பட்ட நம்மால் மட்டும் இதன் பயனை அனுபவிக்க முடியுமா?எண்ணிப்பார்த்தால் துரியோதனனால் அலைக்கழிக்கப்பட்ட நாமே இந்த உலகின் அழிவுக்கும் காரணமானோம்.நம்மிடம் பகைக் கொண்டு நம்மை அழிப்பதே அவன் லட்சியமாக இருந்தது.நமது பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட அவன் உடல் வெளுத்துக் காணப்பட்டான்.இதை சகுனியே திருதிராட்டிரனிடம் சொல்லி இருக்கிறான்.துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் யார் பேச்சையும் கேட்காமல் துரியோதனன் மனம் போனபடி போக வழிவிட்டார்.பீஷ்மரின் பேச்சையும் விதுரருடைய பேச்சையும் கேளாமல் மகனின் மனம் போல செயல்பட்டார்.
கெட்ட புத்தியுள்ள துரியோதனன் பழிபட செயல் புரிந்து உடன்பிறந்தவர்களைக் கொல்வித்தான்.தாய்,தந்தையரைச் சோகத்தில் ஆழ்த்தினான்.கண்ணனை கடுஞ்சொற்களால் ஏசினான்.
யார் செய்த பாவமோ..நாடு அழிந்தது.பல்லாயிரம் வீரர்கள் மடிந்ததும்..நம் கோபம் அகன்றது.ஆனால் இப்போது சோகம் வாள் கொண்டு பிளக்கிறது.நாம் செய்த பாவம்தான்..சகோதரர்கள் அழிவுக்குக் காரணமோ என அஞ்சுகிறேன்.இந்தப் பாவம் தவத்தினால் போகக்கூடியது என ஆகமங்கள் கூறுகின்றன.ஆதலால் நான் தவக்கோலம் பூண்டு காட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்.இல்லறத்தில் இருந்துக் கொண்டு நாம் செய்யும் செயல்கள் மீண்டும் பிறப்பு, இறப்புக் காரணம் என அற நூல்கள் கூறுகின்றன.ஆகவே சுக துக்கங்களைத் துறந்து சோகமில்லா ஓரிடத்தை நாடிச் செல்ல விழைகிறேன்.தவம் ஒன்றே நம் பாவங்களை சுட்டெரிக்கும் என உணர்கிறேன்.ஆகவே அர்ச்சுனா..இந்த பூமியை நீயே ஆட்சி செய்..எனக்கு விடை கொடு..' என்றார்.
இதற்கு அர்ச்சுனனின் பதில் அடுத்த பதிவில்.
'நாம் காட்டிலேயே இருந்திருந்தால் துயரம் இருந்திருக்காது. நம் சகோதரர்களைக் கொன்றதால் என்ன நன்மை..வனத்தில் இருந்த போது நம்மிடம் பொறுமை இருந்தது.அடக்கம் இருந்தது,அஹிம்சை இருந்தது.இவையே தருமம்.அறிவின்மையாலும்,ஆணவத்தினாலும்,பொருளாசையாலும் அரசாட்சியில் உள்ள கஷ்டத்தை விரும்பி துயரத்தை அடைந்தோம்.எல்லோரையும் கொன்றுவிட்டு கேவலமாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.நம்மால் கொல்லப்பட்டவர்கள் மரணம் என்னும் வாயிலில் புகுந்து யமனின் மாளிகையை அடைந்து விட்டார்கள்.நன்மைகளை விரும்பும் தந்தைகள் அறிவுள்ள மக்களைப் பெற விரும்புகின்றனர்.தாய்மார்கள் விரதங்களும், தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.மகனையோ,மகளையோ பெற்று அவர்கள் நல்லபடியாக கௌரவத்துடனும்,செயல்திறனுடனும் புகழுடன் வாழ்வார்களாயின் தமக்கு இம்மையிலும்,மறுமையிலும் நற்பேறு கிட்டும் என பெற்றோர் எண்ணுகின்றனர்.இங்கே அவர்கள் நனவு கனவாயிற்று.அவர்கள் வாழ்க்கையும் பாலைவனம் போல் ஆயிற்று.அவர்களின் பிள்ளைகள் நம்மால் கொல்லப்பட்டார்கள்.அவர்கள் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமை நம்மால் தடுக்கப்பட்டது.
ஆசையும், சினமும் மிக்கவர்கள் வெற்றியின் பயனை அடைய முடியாது.இதில் கௌரவர்களும்..நாமும் ஒன்றுதான்.இந்த பூமியின் பயனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை.ஆசைவயப்பட்ட நம்மால் மட்டும் இதன் பயனை அனுபவிக்க முடியுமா?எண்ணிப்பார்த்தால் துரியோதனனால் அலைக்கழிக்கப்பட்ட நாமே இந்த உலகின் அழிவுக்கும் காரணமானோம்.நம்மிடம் பகைக் கொண்டு நம்மை அழிப்பதே அவன் லட்சியமாக இருந்தது.நமது பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட அவன் உடல் வெளுத்துக் காணப்பட்டான்.இதை சகுனியே திருதிராட்டிரனிடம் சொல்லி இருக்கிறான்.துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் யார் பேச்சையும் கேட்காமல் துரியோதனன் மனம் போனபடி போக வழிவிட்டார்.பீஷ்மரின் பேச்சையும் விதுரருடைய பேச்சையும் கேளாமல் மகனின் மனம் போல செயல்பட்டார்.
கெட்ட புத்தியுள்ள துரியோதனன் பழிபட செயல் புரிந்து உடன்பிறந்தவர்களைக் கொல்வித்தான்.தாய்,தந்தையரைச் சோகத்தில் ஆழ்த்தினான்.கண்ணனை கடுஞ்சொற்களால் ஏசினான்.
யார் செய்த பாவமோ..நாடு அழிந்தது.பல்லாயிரம் வீரர்கள் மடிந்ததும்..நம் கோபம் அகன்றது.ஆனால் இப்போது சோகம் வாள் கொண்டு பிளக்கிறது.நாம் செய்த பாவம்தான்..சகோதரர்கள் அழிவுக்குக் காரணமோ என அஞ்சுகிறேன்.இந்தப் பாவம் தவத்தினால் போகக்கூடியது என ஆகமங்கள் கூறுகின்றன.ஆதலால் நான் தவக்கோலம் பூண்டு காட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்.இல்லறத்தில் இருந்துக் கொண்டு நாம் செய்யும் செயல்கள் மீண்டும் பிறப்பு, இறப்புக் காரணம் என அற நூல்கள் கூறுகின்றன.ஆகவே சுக துக்கங்களைத் துறந்து சோகமில்லா ஓரிடத்தை நாடிச் செல்ல விழைகிறேன்.தவம் ஒன்றே நம் பாவங்களை சுட்டெரிக்கும் என உணர்கிறேன்.ஆகவே அர்ச்சுனா..இந்த பூமியை நீயே ஆட்சி செய்..எனக்கு விடை கொடு..' என்றார்.
இதற்கு அர்ச்சுனனின் பதில் அடுத்த பதிவில்.
Friday, December 4, 2009
79-இரும்புப் பதுமைத் தூண்
வியாசரும்..திருதிராட்டிரனுக்கு ஆறுதல் கூறினார்.ஆயினும் அவன் சினம் அடங்கவில்லை.கண்ணன் தருமரை அறிமுகப் படுத்த சாதாரணமாக தழுவிக் கொண்ட திருதிராட்டிரன்..பீமனைத் தழுவும்போது அறிவிழந்தான்.அவன் மனநிலையை அறிந்திருந்த கண்ணன் பீமனைப் போன்ற இரும்பாலான ஒரு பதுமையைக் காட்டினார்.திருதிராட்டிரன் அந்த இரும்பு பதுமையை இறுகத் தழுவி பொடியாக்கினான்.'இன்னுமா உன் வெறுப்பு தீரவில்லை? இந்த கெட்ட எண்ணமே உன் குலநாசம் அடையக் காரணம்' எனக் கண்ணன் கூற நாணித் தலைக் குனிந்தவன், மனம் தெளிந்து பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் ஆகியோரை தழுவிக் கொண்டான்
பாண்டவர்கள் காந்தாரியைக் காணச் சென்றனர்.காந்தாரியின் சினம் கண்ட வியாசர் 'நீ கோபப்படுவதால் பயன் இல்லை.நீ போருக்கு முன் துரியோதனனிடம் கூறியது என்ன..தருமம் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம் என்றாய்..பாண்டவர்கள் பக்கம் தருமம் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர்.அவர்களை வாழ்த்துவாயாக..'என்றார்.
'பாண்டவர்களும் என் மக்கள் தான்..ஆயினும் பீமன் மீது எனக்குக் கோபம் உண்டு.நெறிகெடத் துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்தினான்.துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தான்.இந்த கொடுமைகளை எப்படி மன்னிப்பேன்?' என்ற காந்தாரிக்கு பீமன் பதிலளித்தான்.
'தாயே! துரியோதனன் எங்களுக்கு இழைத்த கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள்.உச்சக் கட்டமாக..பாஞ்சாலியைத் தன் தொடைமீது வந்து அமரும்படிக் கூறினான்.துச்சாதனன் அவளின் ஆடையைக் களைய முற்பட்டான்..ஆனாலும் நான் மேற்கொண்ட சபதப்படி அவன் ரத்தத்தைக் குடிக்கவில்லை.பல்லுக்கும்,உதட்டுக்கும் கீழே செல்லவில்லை ரத்தம்.அதனை உமிழ்ந்து விட்டேன்.விகர்ணனைப் பொறுத்தவரை நான் எவ்வளவோ..கேட்டுக் கொண்டும் அதனை செவி சாய்க்காமல் போரிட்டு மாண்டான்' என்றான்.
பின் காந்தாரியின் அருகில் வந்து தருமர் வணங்கினார்.கட்டியிருக்கும் துணி வழியே தருமரின் கால் விரல்களின் நகங்களைக் கண்டாள்.அவை சினத் தீயால் கருத்து விகாரம் அடைந்தன.அது கண்டு அர்ச்சுனன் அச்சம் கொண்டான்.பின் ஒருவாறு காந்தாரி சாந்தம் அடைந்தாள்.
பாண்டவர்கள் பின் பெற்ற தாயான குந்தியைக் காணச் சென்றனர்.
வியாசரின் அருளால் காந்தாரி இருந்த இடத்திலிருந்து போர்க்களத்தைக் கண்டாள்.துரியோதனன் தரைமீது மாண்டுக் கிடப்பதுக் கண்டு..கதறி அழுதாள்.கண்ணனைப் பார்த்து..'உன்னால்தான் எல்லாம்..சகோதரர்களிடையே பூசலை அவ்வப்போது தடுத்து நிறுத்தியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்காது..என் குலம் நாசம் அடைந்தாற் போல உன் குலமும் நாசம் அடைவதாக' என சபித்தாள்.அவளுக்கு நல்லுணர்வு ஏற்படுமாறு கண்ணன் ஆறுதல் அளித்தார்.
இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நேரம் வர..குந்தி..கர்ணன் தன் மூத்த மகன் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினாள்.
பின்..முறைப்படி ஈமச் சடங்குகள் நடை பெற்றன.
ஸ்திரீ பருவம் முற்றிற்று..அடுத்து சாந்தி பருவம்..தருமரின் மனக்குழப்பமும்,தெளிவும்,பீஷ்மரின் உபதேசமும்..அடுத்து வரும் பதிவுகளில்..
பாண்டவர்கள் காந்தாரியைக் காணச் சென்றனர்.காந்தாரியின் சினம் கண்ட வியாசர் 'நீ கோபப்படுவதால் பயன் இல்லை.நீ போருக்கு முன் துரியோதனனிடம் கூறியது என்ன..தருமம் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம் என்றாய்..பாண்டவர்கள் பக்கம் தருமம் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர்.அவர்களை வாழ்த்துவாயாக..'என்றார்.
'பாண்டவர்களும் என் மக்கள் தான்..ஆயினும் பீமன் மீது எனக்குக் கோபம் உண்டு.நெறிகெடத் துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்தினான்.துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தான்.இந்த கொடுமைகளை எப்படி மன்னிப்பேன்?' என்ற காந்தாரிக்கு பீமன் பதிலளித்தான்.
'தாயே! துரியோதனன் எங்களுக்கு இழைத்த கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள்.உச்சக் கட்டமாக..பாஞ்சாலியைத் தன் தொடைமீது வந்து அமரும்படிக் கூறினான்.துச்சாதனன் அவளின் ஆடையைக் களைய முற்பட்டான்..ஆனாலும் நான் மேற்கொண்ட சபதப்படி அவன் ரத்தத்தைக் குடிக்கவில்லை.பல்லுக்கும்,உதட்டுக்கும் கீழே செல்லவில்லை ரத்தம்.அதனை உமிழ்ந்து விட்டேன்.விகர்ணனைப் பொறுத்தவரை நான் எவ்வளவோ..கேட்டுக் கொண்டும் அதனை செவி சாய்க்காமல் போரிட்டு மாண்டான்' என்றான்.
பின் காந்தாரியின் அருகில் வந்து தருமர் வணங்கினார்.கட்டியிருக்கும் துணி வழியே தருமரின் கால் விரல்களின் நகங்களைக் கண்டாள்.அவை சினத் தீயால் கருத்து விகாரம் அடைந்தன.அது கண்டு அர்ச்சுனன் அச்சம் கொண்டான்.பின் ஒருவாறு காந்தாரி சாந்தம் அடைந்தாள்.
பாண்டவர்கள் பின் பெற்ற தாயான குந்தியைக் காணச் சென்றனர்.
வியாசரின் அருளால் காந்தாரி இருந்த இடத்திலிருந்து போர்க்களத்தைக் கண்டாள்.துரியோதனன் தரைமீது மாண்டுக் கிடப்பதுக் கண்டு..கதறி அழுதாள்.கண்ணனைப் பார்த்து..'உன்னால்தான் எல்லாம்..சகோதரர்களிடையே பூசலை அவ்வப்போது தடுத்து நிறுத்தியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்காது..என் குலம் நாசம் அடைந்தாற் போல உன் குலமும் நாசம் அடைவதாக' என சபித்தாள்.அவளுக்கு நல்லுணர்வு ஏற்படுமாறு கண்ணன் ஆறுதல் அளித்தார்.
இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நேரம் வர..குந்தி..கர்ணன் தன் மூத்த மகன் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினாள்.
பின்..முறைப்படி ஈமச் சடங்குகள் நடை பெற்றன.
ஸ்திரீ பருவம் முற்றிற்று..அடுத்து சாந்தி பருவம்..தருமரின் மனக்குழப்பமும்,தெளிவும்,பீஷ்மரின் உபதேசமும்..அடுத்து வரும் பதிவுகளில்..
Subscribe to:
Posts (Atom)