Thursday, February 19, 2009

19 - இந்திரபிரஸ்தம்

திரௌபதி விவகாரத்தில் பாண்டவர் குழப்பம் தீர்ந்தாலும்..துருபதன்..யாரோ ஒரு வாலிபன் பந்தயத்தில் வென்று..திரௌபதியை அழைத்துச் சென்றுவிட்டானே..என கலக்கம் அடைந்து..திட்டத்துய்மனை..அவர்கள் பின்னே..அவர்கள் யார் என அறிந்து வர அனுப்பினான்.சுயம்வரத்தில் வென்றவன் அர்ச்சுனன் என்பதை அறிந்து மகிழ்ந்தவன்..அனைவரையும் அரண்மனைக்கு அழைத்தான்.
ஆனாலும்..ஐவரும் திரௌபதியை மணப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை.

இச்சிக்கலை..தீர்க்க வியாசர் தோன்றி..'திரௌபதி..ஐவரை மணத்தல் தெய்வக்கட்டளை.அவர்கள் ஐவரும் தெய்வாம்சம் கொண்டவர்கள்.முற்பிறவியில் திரௌபதி..நல்ல கணவன் வேண்டும் என தவம் இருந்து..சிவனை..ஐந்து முறை வேண்டினாள்.அந்த வினைப்பயன் இப்பிறவியில் நிறைவேறுகிறது.இதனால் இவள் கற்புக்கு மாசு இல்லை..என துருபதனிடம் கூற..அவனும் சமாதானமடைந்தான்.

இதனிடையே..பாண்டவர் உயிருடன் இருப்பதை அஸ்தினாபுரத்தில் அனைவரும் அறிந்தனர்.மேலும்..அவர்கள் திரௌபதியை மணந்த செய்தியையும் கேட்டு..பொறாமை அடைந்தான் துரியோதனன்.
திருதிராட்டினனுக்கோ..இது ஒரு பேரிடியாய் இருந்தது.

பீஷ்மர்,விதுரர்..கருத்துக்கு ஏற்ப..பாண்டவர்களுக்கு பாதி ராஜ்யம் அளிக்க ..திருதிராட்டினன் சம்மதித்தான்.விதுரர்..பாண்டவர்களை அழைத்துவர பாஞ்சாலம் சென்றார்.

அஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்கள்..பீஷ்மரையும்..திருதிராட்டினனையும் வணங்கி ஆசி பெற்றனர்.திருதிராட்டினன்..யுதிஷ்டிரனுக்கு..பாதி ராஜ்யம் அளித்து..மன்னனாக முடி சூட்டினான்.

காண்டப்பிரஸ்தம்..அவர்களுக்கு..ஒதுக்கப்பட்டது.பாகப்பிரிவினை சரியாக இல்லையெனினும்..பாண்டவர் இதை ஏற்றனர்.

பாண்டவர்களும்..கௌரவர்களும்..ஒற்றுமையாக இருக்க திருதிராட்டினன் ஆசி கூறினான்.

காண்டப்பிரஸ்தம்..அடைந்தனர் பாண்டவர்கள்..தேவேந்திரன் கட்டளைப்படி..விசுவகர்மா என்னும் தேவசிற்பி மிகச் சிறந்த ஒரு நகரத்தை இவர்களுக்கு உருவாக்கினான்.அதுவே இந்திரபிரஸ்தம் எனப்பட்டது.

பாண்டவர்கள்..இந்திரபிரஸ்தத்தில் இருந்து நாட்டை நன்கு ஆட்சிபுரிந்தனர்.இதனிடையே நாரதர்..திரௌபதி விஷயத்தில்..பாண்டவர்களிடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தினார்.

பாண்டவர்கள் ஒவ்வொருவரும்..ஆண்டுக்கு ஒருவர் என்ற முறையில்..திரௌபதியுடன் வாழவேண்டும்....அப்படியிருக்கும் போது நால்வரின் குறுக்கீடோ..இன்னலோ இருக்கக்கூடாது.
இந்த உடன்பாட்டை மீறுவோர்..ஓராண்டு நாட்டைவிட்டு விலக வேண்டும்..என்பதே அந்த உடன்பாடு.

No comments:

Post a Comment