Wednesday, March 18, 2009

28.திரௌபதி அவைக்கு வர மறுத்தல்

தேர்ப்பாகன் பாஞ்சாலி வாழ் இடத்திற்குச்சென்றான்... அவளிடம்...'அம்மா..தருமர்...மாமன் சகுனியிடம் மாயச்சூதாடி பொருளைஎல்லாம் இழ்ந்து ..நாட்டையிழந்து..தம்பியரை இழந்து,பந்தைய பொருளாக வைத்து தம்மையும் இழந்தார்.தாயே! உன்னையும் பணயம் வைத்து தோற்றார்.எல்லோரும் கூடியிருக்கும் அவைக்கு உன்னை அழைத்து வருமாறு எம் அரசன் என்னை பணித்தான்'என்றான்.

தேர்பாகன் கூறிய வார்த்தைகளைகேட்ட பாஞ்சாலி..'சூதர் சபையில் மறக்குலத்து மாதர் வருதல் மரபோ..?யார் கட்டளையால் என்னை அழைத்தாய்..'என்றாள்,

அதற்கு அவன்,'துரியோதன மன்னன் கட்டளை'என்றான்.

'நீ சென்று நடந்ததை என்ன என்று கேட்டு வா சகுனியிடம்.. சூதாடியபோது ...தர்மர்..என்னை முன்னே கூறி இழந்தாரா? அல்லது தம்மையே முன்னம் இழந்து பின் என்னைத் தோற்றாரா?இச்செய்தி தெரிந்து வா'என்று திரௌபதி தேர்பாகனை திருப்பி அனுப்பினாள்.

தேர்ப்பாகனும் சபை சென்று 'அரசே..'என்னை முதலில் வைத்திழந்த பின்பு மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற பின்னர் எனைத்தோற்றாரா? என்று பேரவையில் கேட்டு வரச்சொல்லி அப்பொன்னரசி பணித்தாள்..அதன்படி இங்கு வந்துள்ளேன்' என்றான்.

இது கேட்டு பாண்டவர் மனம் நொந்தனர்.மற்ற மன்னர்களும் ஊமையராயினர்.

பாகன் உரைத்ததைக்கேட்டு துரியோதனன் சினத்தில் சீறினான்...'என் பெருமையை அறியா தேர்ப்பாகனே,,,அவள் சொன்னதை இங்கு வந்து உளறுகிறாய்..அந்தப் பாஞ்சாலி இங்கு வந்து பேசட்டும்...'என்றான்.

தேர்ப்பாகனும் ..மீண்டும் பாஞ்சாலியிடம் சென்றான்..ஆனால் திரௌபதியோ..'தர்மர் தன்னை இழந்த பின்னால்...என்னை இழந்திருந்தால்...அது தவறு...அதற்கு அவருக்கு உரிமையில்லை.....நீ மீண்டும் சென்று அதற்கான பதிலை அறிந்து வா என்றாள்.

வருத்தத்துடன் தேர்ப்பாகன் 'எனனைக்கொன்றாலும்...இதற்கான விளக்கம் தெரியாது.நான் திரும்ப இங்கே வரப்போவதில்லை'என உறுதி கொண்டான்.

துரியோதனனிடம் நடந்ததைக்கூறியதுடன்..பாஞ்சாலி மாதவிடாயிலிருக்கிறாள் என்ற செய்தியையும் சொன்னான்.

செய்தி கேட்ட துரியோதனன்'மீண்டும் போ...அவளை ஏழு கணத்தில் அழைத்துவா 'என்றான்.

தேர்ப்பாகன் தெளிவாக சபைக்குக்கூறினான்.'நான் இதுநாள்வரை மன்னன் கட்டளையை மீறியதில்லை...அம்மாதரசி கேட்ட கேள்விக்கு ஆறுதலாக ஒரு சொல் சொன்னால் சென்று அழைத்து வருகிறேன்'என்றான்.

பாகனின் மொழி கேட்ட் துரியோதனன் துச்சாதனனை நோக்கி...'இவன் பீமனைப்பார்த்து பயந்து விட்டான்..இவன் அச்சத்தை பிறகு போக்குகிறேன்..இப்போது நீ சென்று அவளை அழைத்து வா..'என ஆணையிட்டான்

No comments:

Post a Comment