Thursday, March 12, 2009

26.- விதுரரின் அறிவுரை

சூதாட்டத்தை நிறுத்த விதுரர் எவ்வளவோ முயன்றார்.'சந்தர குலத்திலே பிறந்த நாமா இந்த தீய செயலைச் செய்வது..இன்று பாண்டவர் பொறுமை காக்கின்றனர்..குலம் அழிவெய்த விதி துரியோதனனைப் படைத்துள்ளது.குலம் முழுவதும் துரியோதனன் என்னும் மூடனுக்காக அழிய வேண்டுமா? என்றவர் திருதிராட்டிரனை நோக்கி 'சூதாட்டத்தில் துரியோதனன் வெற்றிக்கண்டு மகிழ்கிறாய்.கற்ற கல்வியும்..கேள்வியும் கடலிற் காயம் கரைத்தது போல் ஆயிற்றே..வீட்டுக்குள்ளேயே நரியையும் விஷப்பாம்பையும் பிள்ளைகளாய் வளர்த்திட்டோம்.சாகும் வயதில் தம்பி மக்கள் பொருளை விரும்புகிறாயா..'நாட்டைத் தா' எனக் கேட்டிருந்தால் தந்திருப்பார்களே..அப்படியிருக்க சூதாட்டத்தை நிறுத்துவாயாக'என வேண்டினார்.

விதுரரின் கூற்றைக்கேட்டு துரியோதனன் நெஞ்சம் கொதித்தது.
கண்களில் தீப்பொறி
புருவங்கள் துடித்தன
சினத்தின் விளிம்புக்கே சென்றான்.
நன்றி கெட்ட விதுரா..நாணயமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே..நாசம் தேடும் விதுரா..
எங்கள் அழிவைத்தேடும் நீ..இன்பம் எங்கு உண்டோ..அங்கே செல்'என்று விதுரரை ஏசினான்.

ஆனால் விதுரரோ சிறிதும் குழம்பாமல் தெளிவாகக்கூறினார்...'நான் எங்கு சென்றாலென்ன...அழிவுப்பாதையிலிருந்து உன்னைத்தடுக்கப்பார்த்தேன்.ஆனால் பொல்லாத விதி என்னை வென்றுவிட்டது...என் அறிவுரை எடுபடாது உன்னிடம்..நெடும் பச்சை மரம் போல வளர்ந்து விட்டாய்...இங்கு யாரும் உனக்கு அறிவுரை கூறார்..உன் அவையில் நல்லோர் இருப்பது தகாது...உன் இஷ்டம் போல் செய்'என்று கூறி இருக்கையில் அமர்ந்தார்.

இது வேளை சகுனி..'நீ இழப்பதெல்லாம் மீண்டும் வரும்..காயுருட்டலாமா,,?என்றார்.
தருமர் நிலை தடுமாற..'நாட்டை இழந்த நீ இனி என்ன இருக்கிறது என எண்ணாதே..உன் தம்பிகளை பணயமாக வைத்து இழந்தது அனைத்தையும் மீட்டுக்கொள்;என்றான் சகுனி.

அவையோர் கண்ணீர்விட்டனர்.கர்ணன் மகிழ்ந்தான்,துரியோதனனோ..'தம்பிமாரைவைத்து நீ ஆடி வென்றிடின்..இழந்த பொருட்களை மீண்டுமளிப்போம்..'என்றான்.

.பீமன் அடிபட்ட நாகம் போலக் காணப்பட்டான்...பார்த்தன் முகக்களையிழந்தான்.நகுலனோ நினைவிழந்தான்.முற்றுணர்ந்த சகாதேவன் ஊமையானான்.பீஷ்மர் நெருப்பில் வீ ழ்ந்தாற்போல்துடித்தார்.விதுரர் பெரும் துன்பமுற்றார்.

No comments:

Post a Comment