Thursday, January 29, 2009

10 - வியாசர் வந்தார்

பீஷ்மரும்..குலத்துக்கு அனுகூலம் என்பதாலும், தர்மசாத்திரத்திற்கு இதனால் கேடில்லை என்பதாலும்..சத்யவதி கூறியதற்கு தடையேதும் சொல்லவில்லை.உடனே சத்யவதி வியாசரை நினைக்க..மகரிஷி தாய் முன்னே தோன்றினார்.

அன்னையே..என்னை அழைத்தது ஏன்? என அவர் வினவ..சத்யவதியும்..'தவத்தோனே..நீ எனக்கு மூத்த மகனாய்..உண்டாக்கப்பட்டிருக்கிறாய்...விசித்திர வீரியன்..எனது இளைய மகன்.பீஷ்மரும் உனக்கு அண்ணனாவார்.பீஷ்மர்..குல சந்ததி விருத்திக்கு..அவரது பிரமசரிய விரதத்தால் உதவ முடியாதவராக இருக்கிறார்.ஆகவே நீ என் கோரிக்கையை ஏற்று...உன் இளைய சகோதரனின் மனைவி
யர்தேவமகளிர் போன்றவர்கள்..அவர்களிடம் நீ சந்ததியை உருவாக்க வேண்டும்' என்றாள்.

அதற்கு வியாசர், தாயே!. புத்திரதானத்தை..சாத்திரங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.ஆனால் நான் சந்ததியைத் தர வேண்டுமென்றால்..அம்மகளிர் இருவரும்..என் விகாரத் தோற்றத்தைக் கண்டு..அருவருப்புக் கொள்ளக்கூடாது.என் உடலிலிருந்து வீசும்..துர்நாற்றத்தைப் பொருட்படுத்தக் கூடாது.அப்படி அம்பிகை என்னுடன் கூடுவாளாயின்..அவளுக்குப் பிறக்கும் மகன்..நூறு மகன்களைப் பெறுவான்' என்று கூறினார்.

சத்யவதி...அம்பிகையை அழைத்து 'நீ ஒரு மகானுடன் கூடிப் புத்திரனைப் பெற வேண்டும்..இது அரச தர்மம்தான். மறுக்காதே!"என்றாள்.அம்பிகையும் நாட்டின் நலன் கருதி..இதற்கு சம்மதித்தாள்.

அன்றிரவு...வியாசர் அம்பிகையின் அறையில் நுழைந்தார்...அவரது, செம்பட்டையான சடை முடி,விகாரமான தோற்றம்..நாற்றம்..எல்லாம் பார்த்து..அம்பிகை கண்களை மூடிக்கொண்டாள்.அச்சம் காரணமாக கண்களைத் திறக்கவே இல்லை.வியாசர் அம்பிகையுடன் கலந்தார்.

பின் தாயிடம் வந்தவர் 'தாயே! வீரமிக்க மகன் பிறப்பான்..ஆனால்..அம்பிகை கண்களை மூடிக்கொண்டிருந்த படியால்..பிறக்கும் மகன் குருடனாய் இருப்பான்' என்றார்.

மகனே, குரு வம்சத்தில்..குருடனாக இருப்பவன்..அரசாள தகுதியற்றவன்.அதனால்..சிறந்த மகனை அம்பாலிகையுடன் கூடி பெற்றுத்தர வேண்டும் என்றாள்..சத்யவதி.
வியாசர் கூறியபடி..அம்பிகைக்கு ஒரு குருட்டுக் குழந்தை பிறந்தது..அதுவே..'திருதிராட்டினன்'.

பின்..வியாசரை அழைத்தாள் சத்யவதி.வியாசரும் அம்பாலிகையுடன் சேர்ந்தார்.ஆனால் அம்பாலிகை..வியாசரின் கோரத்தோற்றம் கண்டு..பயந்து..உடல் வெளுத்தாள்.உடன் வியாசர்.'.உனக்குப் பிறக்கும் மகனும் வெண்மை நிறத்துடன் இருப்பான்.பாண்டு அவன் பெயர்..அவனுக்கு 5 பிள்ளைகள் பிறப்பர்' என்றார்.அம்பிகையும் அதுபோல மகனை பெற்றெடுத்தாள்.

இரு குழந்தைகளும்..குறைபாடுடன் இருந்ததால்..'அம்பிகைக்கு..இன்னொரு மகனைத் தர வேண்டும்' என சத்யவதி வேண்டினாள்.

ஆனால்..அம்பிகை அவருடன் மீண்டும் சேர மனமில்லாது..ஒரு பணிப்பெண்ணை அனுப்பினாள்.பணிப்பெண்ணும்..வியாசரும்..மன மகிழ்சியுடன் கூடினர். பின் வியாசர்..'பணிப்பெண்ணின் அடிமைத் தன்மை நீங்கியது என்றும்..அவளுக்கு பிறக்கும் குழந்தை..சிறந்த ஞானியாய் விளங்குவான் என்றும் கூறி..அவன் பெயர் விதுரன் என்று சொல்லி மறைந்தார்.

வியாசர் மூலமாக..அம்பிகை,அம்பாலிகை,பணிப்பெண் ஆகியோருக்கு..திருதிராட்டினன்,பாண்டு,விதுரன் ஆகியோர் பிறந்தனர்.

4 comments:

Unknown said...

ரொம்ப அருமை சார்!!!
ரொம்ப நாள் ஆச்சு மஹாபாரதம் படிச்சு....
மீண்டும் ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி !!!!!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Kamal

karges said...

என்ன எழவோ... நாம மேற்கத்திய கலாச்சாரம் பற்றி பேச கொஞ்சமும் தகுதியற்றவர்கள் என்று மட்டும் கிளியரா தெர்து....

Healthcare Raja Nellai said...

ஆஹா விதுரரின் பிறப்பு பற்றி இன்று தான் தெரிந்து
கொண்டேன். நன்றி

Post a Comment