Tuesday, January 27, 2009

9. சத்யவதியின் கதை

அம்பை வெளியேறியபின் பீஷ்மர்..விசித்திர வீரியனுக்கு..அம்பிகை,அம்பாலிகையை மணம் செய்வித்தார்.இவர்களுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த விசித்திர வீரியன்..காச நோயால் இறந்தான்.

நாட்கள் சில சென்றதும்..சத்யவதி..பீஷ்மரிடம் 'மகனே! உன் தம்பி மக்கள் பேறின்றி இறந்தான்.சந்தனுவின் குலம் தழைக்க வேண்டும்.தருமசாத்திரம் தெரிந்தவன் நீ...புத்திரர் இல்லா குலம் எப்படி தழைக்கும்..ஆகவே..நீ அம்பிகை..அம்பாலிகையுடன் கூடிப் புத்திர சந்ததியை உண்டாக்கு..' என்றாள்.

ஆனால்..பீஷ்மரோ..'அன்னையே! நீங்கள் உரைத்தது..மேலான தர்மமே...ஆனாலும் என் சபதத்தை நான் மீறமாட்டேன்..'என உறுதியாக உரைத்தார்.

அதற்கு சத்யவதி..'ஆபத்துக் காலங்களில்..சாத்திரம் பார்க்க வேண்டியதில்லை..நெருக்கடியான நேரங்களில் ..தர்மத்தில் இருந்து..விலகுதல் பாவம் இல்லை.ஆகவே நான் சொல்வது போல செய்..' என்றாள்.

ஆனால் பீஷ்மரோ..'அன்னையே..நம் குலம் தழைக்க ..வேறு ஏதேனும் யோசியுங்கள்..'என்றார்.பின் சத்யவதி பீஷ்மரிடம்..தன் கதையைக் கூறலானாள்...

'கங்கை மைந்தனே! இன்று ஒரு உண்மையை உன்னிடம் தெரிவிக்கிறேன்.அது ரகசியமாகவே இருக்கட்டும். முன்பு வசு என்ற மன்னனின் வீரியத்தை.ஒரு மீன் தன் வயிற்றில்..கர்ப்பமாக தாங்கியிருந்தது.அந்த மீன் வயிற்றில் வளர்ந்தவள் நான்தான்.ஒருநாள் ஒரு செம்படவன்..அம்மீனை தன் வீட்டிற்கு கொண்டுபோனான்.அங்கு நான் பிறந்தேன்.அவர் பின் என்னை தன் மகளாய் வளர்த்தார்.நானும் வளர்ந்து கன்னிப்பருவம் எய்தினேன்.யமுனை ஆற்றில் பரிசல் ஓட்ட ஆரம்பித்தேன்.

அப்போது ஒரு நாள்..பராசர முனிவர் என் படகில் ஏறினார்.என்னைப் பார்த்து காமவயப் பட்டார்.ஆனால் நானோ பயந்தேன்.அப்போது அவர்..'நான் செம்படவப் பெண் இல்லை என்று உணர்த்தினார்.உடன் நான் இந்த பகல் நேரத்திலா ..என்றேன்.அவர் உடனே சூரியனை மறைத்து இருளாக்கினார்.

என் உடலில் மீன் நாற்றம் வீசுகிறதே..என்றேன்..உடன் என் உடலில் நறுமணம் வீச வைத்தார்.

இந்த நதிக்கரையிலேயே..நீ கர்ப்பம் அடைந்து...குழந்தை பிறந்து மீண்டும் கன்னியாகி விடுவாய்..என்றார்.

பின்..அவர் என்னைச் சேர்ந்து..ஒரு மகனை உண்டாக்கிவிட்டார்.

எனக்குப் பிறந்த அந்த மகன்..'த்வைபாயனன்' என்றழைக்கப்பட்டான்.அவன் யோக சக்தியால்..மகரிஷி ஆனான்.வேதங்களை நான்காக வகுத்தான்..அதனால் வேதவியாசன் என்ற பெயர் பெற்றான்.

நீ சம்மதித்தால்..நான் அவனுக்கு கட்டளை இடுகிறேன்..உடன் அந்த மகரிஷி..இங்கு தோன்றி..அம்பிகை,அம்பாலிகைக்கு புத்திர பாக்கியம் அளிப்பான்.'..என்றாள்.

No comments:

Post a Comment