Monday, January 5, 2009

உள்ளே புகுமுன்....

பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர்.வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம் என்ற புண்ணியக்கதையைக் கொடுத்தவர்.

பாரதத்தை எப்படி உலகுக்கு அளிப்பது என வியாசர் சிந்தித்தார்.பிரம்மனை தியானித்தார்.பிரம்மன் நேரில் காட்சிக் கொடுத்ததும்..அவரிடம்..'பகவானே..இதை எழுதுகிறவர் பூமியில் யாரும் இல்லையே!'என்றார்.

பிரம்மனும்..'உம்முடைய நூலை எழுத..கணபதியை தியானம் செய்யவும்' என்று கூறிச் சென்றார்..

வியாசர் கணபதியை தியானிக்க..கணபதி தோன்றினார்..வியாசர் அவரிடம்..'பாரதத்தை நான் சொல்லச் சொல்ல..நீர் எழுத வேண்டும்" என்ற வேண்டுகோளை வைத்தார்.

வினாயகரும்..ஒப்புக்கொண்டு 'சரி...ஆனால் நான் எழுதும் போது என் எழுதுகோல் நிற்காது..எழுதிக்கொண்டே போகும்..இதற்கு சம்மதித்தால் எழுதுகிறேன்' என்றார்.

இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர்'பொருளை உணர்ந்துக் கொண்டுதான் நீர் எழுத வேண்டும் ' என்றார்.

வினாயகரும் சம்மதிக்க..வியாசர் சொல்ல ஆரம்பித்தார்.ஆங்காங்கு பொருள் விளங்காமல் முடிச்சுகளை வைத்து அவர் சொல்லிக் கொண்டு போக ..பொருள் அறிய கணேசன் தயங்கிய நேரத்தில்..மற்ற

ஸ்லோகங்களைமனதில் கொண்டு வந்து வியாசர் சொன்னார்...

No comments:

Post a Comment