Saturday, August 1, 2009

53-விராட பருவம் முடிந்தது

விராட மன்னன்..கங்கருடன் சூதாடிக் கொண்டிருந்த போது..'பீஷ்மர் முதலானோரை வென்ற என் மகன் போல் உம்மை நான் வெல்வேன்' என்ரான்.

ஆனால்..அதற்கு கங்கர் 'பிருகன்னளையின் உதவியால்தான் உன் மகனுக்கு வெற்றி கிடைத்திருக்க வேண்டும்' என்றார்.இதனால்..கோபம் கொண்ட விராடன்..கையில் இருந்த பகடையை கங்கர் மீது வீசினான்.அவர் அவர் நெற்றியிலும்..வலது காதிலும் பட்டு ரத்தம் கொட்டிற்று.அருகில் இருந்த சைரந்தரி..பதறி..தன் மேலாடையால்..அந்த ரத்தத்தைத் துடைத்து..அதனை பிழிந்து ஒரு பாத்திரத்தில் ஏந்தினாள்.அச்செயல் மன்னனுக்கு அருவருப்பை ஏற்படுத்த..உடன் சைரந்தரி'இவர் ஒரு மகான்.இவர் ரத்தம் பூமியில் பட்டால்..மழை பொழியாது..உனக்குக் கேடு வரும்' என்றாள்.

இந்நிலையில்..உத்தரனும்..பிருகன்னளையும் வர 'உத்தரன் மட்டும் வரட்டும்' என்றார் கங்கர்.உள்ளே வந்த உத்தரன் கங்கரைக் கண்டான்.நேற்றியில் இருந்த காயத்தைப் பார்த்து 'இந்த கொடுமையை இழைத்தது யார்? என்றான்.மன்னன் அலட்சியமாக அது தன்னால் நேர்ந்தது என்றான்.

அவரின் காலில் விழுந்து மன்னனை மன்னிப்புக் கேட்கச் சொன்னான் உத்தரன்.பின் அவர்கள் யார் என்பதைக் கூறினான்.

பெரு மகிழ்ச்சியுற்ற மன்னன்..தன்னை மன்னிக்குமாறு கூறினான்..'என் நாட்டையே உங்களுக்குத் தருகிறேன்' என்றான்.அர்ச்சுனனை நோக்கி..'மாவீரனே..என் மகளுக்கு ஆடலும்..பாடலும் கற்பித்தவனே..என் மகள் உத்தரையை உனக்குத் தர விரும்புகிறேன்' என்றான்.

உடன் அர்ச்சுனன் 'மன்னா..ஒராண்டுக் காலம் உம் மகளை என் மகளாகவே நினைத்தேன்..அந்த மனநிலையை என்னால் மாற்ரிக் கொள்ள முடியாது.ஆகவே..என் மகன் அபிமன்யுவிற்கு அவளை மணம் செய்வியுங்கள்' என்றான். மன்னனும் ஒப்புக் கொண்டான்.

அப்போது..அஸ்தினாபுரத்திலிருந்து..துரியோதனனின் ஒற்றன் ஒருவன் வந்தான்.'ஒப்பந்தபடி 13ஆம் ஆண்டு முடிவிற்குள் நாங்கள் அர்ச்சுனனைப் பார்த்து விட்டோம்..ஆகவே நீங்கள் மீண்டும் வனவாசம் போக வேண்டும்' என்ற செய்தியுடன்.

அதற்கு தருமர்..'பதின்மூன்று ஆண்டுகள் மட்டுமின்றி மேலும் 5 மாதங்கள் கழித்தே நாங்கள் வெளிப்பட்டோம்.இக்கணக்கை பீஷ்மரேஉரைத்துள்ளார்' என்ற பதிலை அனுப்பினார்.

பாண்டவர்கள் வெளிப்ப்ட்ட செய்தி கேட்டு கண்ணன்,சுபத்ரை,அபிமன்யு ஆகியொர் விராட நாடு வந்தனர்.

திட்டமிட்டபடி..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிற்கும்..உத்தரைக்கும் மணம் நடந்தது.

(விராட பருவம் முற்றும்..இனி உத்தியோக பருவம்)

2 comments:

Post a Comment