Wednesday, July 1, 2009

48 - வேலையில் அமர்ந்தனர்

தருமர்..சாத்திரச் சுவடியும்..தர்ப்பைப் புல்லும் கொண்டு கங்கன் எண்ணும் பெயருடன் விராடனைச் சந்தித்தார்.விராடனும்...அவரது நட்பு தனக்குத் தேவை என அவரை தன்னிடமே இருக்க வேண்டினான்.

பின் பீமன் ஒருநாள் வந்து..தன் பெயர் வல்லன் என்றும்..தனக்கு சமையல் வேலை தெரியும் என்றும்..யுதிஷ்டர் இடத்தில் சமையல்காரனாய் இருந்ததாகவும் கூறினான்.அவன் பேச்சில் நம்பிக்கை ஏற்பட..விராடனும் அவனை..அரண்மனை சமையல்காரர்களுக்கு தலைவனாக இருக்க கட்டளையிட்டான்.

திருநங்கை வடிவில் வந்த அர்ச்சுனனோ..தன் பெயர் பிருகன்னளை என்றும்..தான் ஆடல் பாடல்களில் பயிற்சி பெற்றுள்ளதாகவும்..மன்னரின் மகளுக்கு..நல்லிசையும் , நாட்டியமும் கற்றுத்தத் தயார் என்றான்..வாய்ப்பும் கிட்டியது.

பின் வந்த நகுலன்...'தாமக்கிரந்தி' என்பது தன் பெயர் என்றும்...குதிரைகள் இலக்கணம் தனக்குத் தெரியும் என்றும்...யுதிஷ்டரின் குதிரைகளை அடக்கிய அனுபவம் உண்டு என்றும் கூற...விராடன்..குதிரைகளை காக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான்.

சகாதேவன்..தந்திரிபாலன் என அங்கு வந்தான்.தான் பாண்டவர்களின் பசுக்கூட்டத்தை அக்கறையுடன் கவனித்துக் கொண்ட அனுபவத்தைக் கூற மன்னனும்..அந்தப் பணியை அவனுக்குக் கொடுத்தான்.

திரௌபதியோ...சைரந்திரி என்ற பெயருடன் வந்தாள்.தன்னை ஒரு வேலைக்காரி என்று ராணியார் சுதேட்சணையிடம் அறிமுகம் செய்துக் கொண்டால்.தனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்கள் என்றும் ஒரு சாபத்தால் பிரிந்திருப்பதாகவும் உரைத்தாள்.இந்த பிரிவு ஓராண்டுகள் மட்டுமே என்றாள்.

ஆனால்..அரசமாதேவியோ 'பெண்ணே!..உன் அழகு..பிற ஆடவரால்..உன் கற்புக்கு பங்கத்தை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சுகிறேன்..'ஏன்றாள்.

'அரசியாரே!..தாங்கள் கவலைப்பட வேண்டாம்..என் கணவர்கள் வெளித்தோற்றத்திற்கு தெரியமாட்டார்களே தவிர..என்னை உயிர்போல் பாதுகாப்பர்.எவனாவது..என்னிடம் முறைதவறினால் கொல்லப்படுவார்கள்' என திரௌபதி உரைத்தால்.

பாண்டவர் தேவிக்கு..ஒப்பனை செய்த அனுபவம் உண்டு என்றும்..அரசிக்கு அப்பணியை செய்வதாகவும் உரைத்தாள்.

அரண்மனையில் வேலைக்காரர்களாக அனைவரும் இருந்தது..விதியின் கொடுமை என்றாலும்...மேற்கொண்ட பணியை நன்கு செய்து முடித்தார்கள்.

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment