Wednesday, July 8, 2009

49 - கீசகன் வதம்

விராட நாட்டில் விழாக்கள் நடக்கும்.விழாக்காலங்களில் பல விளையாட்டுகள் நடைபெறும்.வடக்கே இருந்து ஜீமுதன் என்ற மல்லன் வந்தான்.அவன் விராட நாட்டு மன்னர்களை எளிதாக வென்றான்.பின்னர்..'என்னுடன் மற்போர் புரிபவர் யாரும் இல்லையா?' என அறைகூவல் விடுத்தான்.

யாரும் வரவில்லை.மன்னன் மனம் வருந்த,கங்கர்..'அரசே..புதிதாக சேர்ந்திருக்கும் வல்லன் என்னும் சமையற்காரன்..போர் புரிவதில் வல்லவன் என நினைக்கிறேன்..அவனை அழையுங்கள்' என்றார்.

மன்னனும் அவ்வாறே செய்ய..வல்லனும்...ஜீமுதனும் மோதினர்.வடநாட்டு மல்லன் தோற்று ஓடினான்.

பத்து மாதங்கள் அஞ்ஞாத வாசம் கழிந்தது.பின் ஒரு நாள்..அரசி சுதேட்சணைக்கு தம்பி ஒருவன் இருந்தான்.அவன் பெயர் கீசகன்.அவன் அந்த நாட்டு படைத்தளபதியும் ஆவான். அவன் ஒரு நாள்..அரசியைக் காண வந்த போது..சைரந்தரியைக் கண்டான்.ஆசைக் கொண்டான்.தன் இச்சைக்கு பணியுமாறு கேட்டான்.

வீண் தொல்லை தராதே! என் கந்தர்வக் கணவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்' என சைரந்தரி எச்சரித்தாள்.

காதல் மயக்கம் தீராத அவன்..அரசியிடம் சென்று..அவ்வேலைக்காரியை எனக்கு பணியச் சொல் என்றான்.

தம்பி..அவள் அடைக்கலமாய் வந்தவள்..அவளுக்கு தீங்கு இழைத்தால்..அவளின் கந்தர்வக் கணவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்' என்றாள்.

ஆனால் அவன் பயப்படவில்லை..காதல் நோயால் மயங்கினான்.வேறு வழி தெரியாத அரசி..சைரந்தரியிடம் கீசகன் வீட்டிற்கு உணவு கொண்டு செல்ல பணித்தாள்.

'நீ தான் போக வேண்டும்" என அரசி கடுமையாக ஆணையிட்டாள்.

சைரந்தரியும் சென்றாள்.அவள் கையைப் பிடித்து இழுத்து..அவளை கீசகன் அணைக்க முயன்றான்.ஓடிய அவளை எட்டி உதைத்தான்.அரசமண்டபத்திற்கு வந்துவிட்டார்கள் அவர்கள்."இந்த அநீதியைக் கேட்பார் இல்லையா?' என கதறினாள்.விராட மன்னன் உட்பட அனைவரும் வாளாயிருந்தனர்.

பீமன் அவளை தனியாக சந்தித்து ஒரு யோசனைக் கூறினான்.அதன்படி சைரந்தரியும்...கீசகன் ஆசைக்கு இணங்குவது போல நடித்து..அவனை நடனசாலைக்கு வரச் சொன்னாள்.

கீசகனும் வந்தான்...கட்டிலில் போர்வை போர்த்தி படுத்திருப்பது அவள்தான் என எண்ணி ஆசையோடு அணைக்கப் போனான்.வீறு கொண்டு எழுந்த பீமன்..அவனைத் தாக்கி காலில் இட்டுத் தேய்த்துக் கொன்றான்.

கீசகன் கொல்லப்பட்ட சேதி கேட்ட அவன் சகோதரர்கள் சைரந்தரியைக் கொல்லவர ..பீமன் அவர்களையும் கொன்றான்.

பொழுது விடிந்ததும்..அவர்களை கந்தர்வர்கள் தான் கொன்றார்கள்..என விராடான் உட்பட அனைவரும் நம்பினர்.

விராடன்..இதற்கெல்லாம் சைரந்தரிதான் காரணம்..என அவளை வெளியேற்றி விடுமாறு அரசியிடம் கூறினான்.

சைரந்தரி, அரசியிடம் இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்கக் கூறினாள்.'கந்தர்வர்களால் இனி யாருக்கும் தீங்கு நேராது..நன்மையே நடக்கும்..இது சத்தியம்' என்றாள்.அரசியும் சரி என அனுமதித்தாள்.

No comments:

Post a Comment