Monday, July 20, 2009

51-அர்ச்சுனன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளல்

துரியோதனன் தனக்குத் துணையாகப் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,துச்சாதனன்,கர்ணன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பெரும் படையுடன்..விராட நாட்டின் வடக்குப் பக்கம் இருந்த பசுக்களைக் கவர்ந்தான்.அரண்மனையில் இருந்த அரசகுமாரன் உத்தரனுக்கு செய்தி போயிற்று. 'எனக்கு நல்ல சாரதி கிடைத்தால் அர்ச்சுனனைப் போல் போரிட்டு பகைவனை வெல்வேன்'என்றான்.அதனைக் கேட்ட சைரந்தரி..'பிருகன்னளை ஆடல் பாடலில் மட்டுமல்ல..தேரோட்டுவதிலும் வல்லவள்.இவளை சாரதியாகக் கொண்டு போருக்குப் போகலாம்' என்றாள்.

போருக்கு கிளம்பிய உத்தரன்..கௌரவர் சேனையைக் கண்டு திகைத்தான்.தேரினின்று குதித்து ஓடினான்.அவனை விரைந்து பிடித்த பிருகன்னளை..அவனுக்கு ஊக்கம் பிறக்கும் வண்ணம் உரையாடினாள்.இதை துரோணர் கண்டார்.

'சாரதியாக இருப்பவள்..பேடி அல்ல..அர்ச்சுனன் என நினைக்கிறேன்' என்றார்.கர்ணன் அதை மறுத்தான்.

பிருகன்னளை உத்தரனிடம்..'நீ தேரை செலுத்து..நான் போரிடுகிறேன்..'என்றாள்.உத்தரன் ஒப்புக் கொண்டான்.மரத்தின் பொந்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்கள் எடுத்துவரச் செய்தாள்.காண்டீபம் என்னும் வில்லை உத்தரனுக்குக் காட்டினாள்.அது அர்ச்சுனனுடையது. அதனால் அவன் தேவாசுரர்களை வென்றான்.

முதன் முதலில் இவ்வில்லை பிரமதேவர் வைத்திருந்தார்.பின்..சிவ பெருமான் வைத்திருந்தார்,பின் சந்திரனிடம் இருந்தது.அதன் பின் வருணன் சில ஆண்டுகள் வைத்திருந்தார்.அவரிடமிருந்து அக்கினி தேவன் கைக்கு வந்தது.அக்கினி தேவன் அர்ச்சுனனுக்கு கொடுத்தான்.மற்ற கருவிகளைப் பற்றியும்..பிருகன்னளை அர்ச்சுனனுக்கு விளக்கினாள்.அவை தருமர்,பீமன்,நகுலன்,சகாதேவன் ஆகியோருக்கு உரியவை என்றார்.

இவற்றைக் கேட்ட உத்திரன்..'பாண்டவர்கள் இப்போது எங்கே?" என்றான்.அப்போது பிருகன்னளை தான் அர்ச்சுனன் என்றும்...மற்றவர்கள் பற்றியும் விளக்கி, 'நாங்கள் ஓராண்டு மறைந்திருக்க வேண்டி..உங்கள் அரண்மனையில் அடைக்கலம் புகுந்தோம்..சில நாட்களில் எங்களை வெளிப்படுத்திக் கொள்வோம்.அது வரை எல்லாம் ரகசியமாக இருக்கட்டும்.உன்னைச் சார்ந்தவர்களீடம் கூட இதை வெளியிடாதே' என்றான்.

உடன் உத்திரன் வியப்படைந்தான்.'இனி நான் யாருக்கும் அஞ்சேன்..நானே உனக்கு பாகன்' என்றான் மகிழ்வோடு.

No comments:

Post a Comment