Tuesday, November 30, 2010

124-நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது(4)

அரக்க அரசன் விருபாட்சன் தன் நண்பனான ராஜதர்மா என்ற கொக்கிற்குத் தீ மூட்டித் தகனம் செய்தான்.சிதை தயாரிக்கப் பட்டு ஆடை,அணிகலங்களால் அலங்கரிக்கப்பட்டது.சந்தனக் கட்டைகள் அடுக்கப் பட்டன.சிதைக்குத் தீ மூட்டுகையில், மேலே வந்துக் கொண்டிருந்த தாட்சாயணி சுரபியின் வாயிலிருந்து சிந்திய பாலின் நுரையானது ராஜதர்மாவின் சிதையில் விழுந்தது.அதனால் ராஜதர்மா என்னும் கொக்கு உயிர் பெற்று எழுந்தது.விருபாட்சனுடைய நகரை அடைந்தது.

அந்த நேரத்தில் தேவேந்திரன் அங்கு வந்தான்.அந்த கொக்கு இந்திரனை நோக்கி'தேவேந்திரா..என் நண்பனான கௌதமனையும் பிழைக்கச் செய்ய வேண்டும்'என்றது.இந்திரனும் கௌதமனை உயிர் பிழைக்கச் செய்தான்.

இந்திரன் விருபாட்சனை நோக்கி, ராஜதர்மா, பிரம்மாவிடம் பெற்ற ஒரு சாப வரலாற்றைக் கூறினான்.'அரக்க அரசனே..முன்பு ஒரு காலத்தில் பிரம்மதேவன் மிக்க சினம் கொண்டு ராஜதர்மாவை நோக்கி"நீ எனது சபைக்கு ஒரு முறையேனும் வராத காரணத்தால் தரும குணம் உள்ளதும்,பரம் பொருளை அறியத் தக்கதுமான கொக்காகப் பிறப்பாயாக.பாவச் செயல் புரிபவனும்,நன்றி கெட்டவனுமான ஒரு அந்தணன் உனது இடம் தேடி வருவான்.உன்னைக் கொல்வான்.அப்போது உனக்கு விடுதலைக் கிடைக்கும்.அந்தச் சாபப்படி ராஜதர்மா உத்தமமான பிரம்மாவின் சத்திய உலகத்தை அடையும்.அந்த அந்தணனும் நரகத்தை அடைவான்" என்று கூறி தேவர் உலகை அடந்தான்.

பீஷ்மர் தொடர்ந்தார்..'தருமா..இன் நிகழ்ச்சியை முன்னர் நாரதர் எனக்குக் கூறினார்.நான் உனக்கு உரைத்தேன்.நன்கு நினைவில் வைத்துக் கொள்..

நன்றி கொன்றவனுக்குப் பிராயச்சித்தமே இல்லை.அவனுக்குப் புகழும் இல்லை.இன்பமும் இல்லை.இதுபோலவே நண்பனுக்குத் துரோகம் இழைத்தால் நரகம்தான் கிடைக்கும்.எனவே ஒவ்வொருவரும் நன்றியுடனும்,நண்பரிடம் அக்கறையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் 'என்றார்.

1 comment:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை..அருமை..அருமை!!!!

மஹா பாரத யுத்தத்தில் வரும் யானைப் போரில் வல்லவனான பகதத்தனைப் பற்றி எழுதுவீர்களா, ஸார்?

Post a Comment