Saturday, August 8, 2009

55-சல்லியன் யார் பக்கம்

மத்ர தேச மன்னன் சல்லியன் நகுல,சகாதேவர்களின் தாய் மாமன்.பாண்டவர்கள் அவனை தங்கள் பக்கம் இருக்க வேண்டினர்.அவனும் அதையே விரும்பினான்.பெரும் படையுடன்..பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றான்.

அவன் செல்லும் வழியெல்லாம்..பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.படைவீரர்களுக்கு சிறந்த உணவு தரப்பட்டது.இவை யாவும்..துரியோதனன் ஏற்பாடாகும்.இது அறியா சல்லியன்..இவை த்ருமரால் செய்யப்பட்டது என எண்ணினான்.இது துரியோதனனுக்கு தெரிய வந்தது.அவன் ஓடோடி வந்து..சல்லியனிடம்'எங்கள் வரவேற்பை ஏற்றமைக்கு நன்றி' என்றான்.

துரியோதனின் சூழ்ச்சி வேலை செய்தது.. சல்லியன்'இவ்வளவு உபசரிப்பு அளித்தமைக்கு என்ன கைமாறு செய்வேன்' என்றான்.

வரும் போரில் தாங்கள் எங்களுக்கு உதவிட வேண்டும்..என்றான் துரியோதனன்.சல்லியன் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டான்.ஆயினும்..துரியோதனனுக்கு தன் ஆதரவு உண்டு என்றான்.

பாண்டவர்களை திட்டமிட்டபடி சந்தித்த சல்லியன், இடை வழியில் நடந்தவற்றைக் கூறினான்.பாண்டவர்கள் அதிச்சியுற்றனர்.

என்ன செய்வது என அறியாத தருமர்..ஒருவாறு மனம் தேறி, சல்லியனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.வரவிருக்கும் போரில் கர்ணனுக்கு தேரோட்டும் நிலை ஏற்படின்..அர்ச்சுனனின் பெருமையை..அவ்வப்போது அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே அவ்வேண்டுகோள்.பதினேழாம் நாள் போரில் சல்லியன் இதை நிறைவேற்றியதை பின் காண்போம்.

பாண்டவர்களின் தூது
-- ---------------------

பாண்டவர்களின் தூதுவன்..பாஞ்சால நாட்டுத் துருபதனின் புரோகிதன் அஸ்தினாபுரம் அடைந்தான்.பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள்..காட்டிலும்..நாட்டிலும்..நிபந்தனைப்படி வாழ்ந்து விட்டனர்.அவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதே சரியான நீதியாகும்.அப்படி அளிக்காவிடின் யுத்தம் தவிர்க்கமுடியாது..என்றான்.

தூதுவன் உரை கேட்டுக் கர்ணன் கோபமுற்றான்.பாண்டவர்களை வெற்றிக் கொள்ளத் த்ன்னால் முடியும் என்றான்.

கர்ணன் சொன்னதை பீஷ்மர் ஏற்கவில்லை.திருதிராட்டிரன் தூதுவனை திரும்பிப் போக பணித்தான்.

6 comments:

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்கள்
அற்புதமான பணி
தொடருங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நிகழ்காலத்தில்

இது நம்ம ஆளு said...

அருமை தொடருங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இது நம்ம ஆளு

PARAM said...

hello sir,
i read this passage i have question? who is person to go to dhuriyodannan?
i heard that it was load kriShanan and he was some plan to week oppesite site?
can u explian me?

T.V.ராதாகிருஷ்ணன் said...

Pl.read from 54 ..you can get the answer


http://bagavathgeethai.blogspot.com/2009/08/55.html

Post a Comment