Thursday, June 18, 2009

46 - வனபர்வம் முடிந்தது

தருமரின் பதில்களில் திருப்தியடைந்த யட்சன் 'தருமரே..உமது தம்பியரில் யாருக்கேனும் உயிர் தருகிறேன்..யாருக்கு வேண்டும்?' எனக் கேட்க...தருமர்..'நகுலன் உயிர் பெற வேண்டும்' என்றார்.

உன் உடன் பிறந்த மகாவீரர்களான..அர்ச்சுனன், பீமனை விடுத்து..நகுலன் உயிரை ஏன் விரும்புகிறாய்..என்ற யட்சனுக்கு..தருமர்..'என் தந்தைக்கு குந்தி,மாத்ரி என இரு மனையியர்.இருவருமே எங்களுக்கு தாயார்கள் தான்..ஆயினும்..இருவரும் புத்திரர் உள்ளவராக விரும்புகிறேன்' என்றார்.

தருமரின்..பரந்த மனதைப்பாராட்டிய யட்சன்..'எல்லோரும் உயிர் பெறட்டும்' எனக் கூற...உறங்கி எழுவது போல அனைவருமெழுந்தனர்.

பின்னர் தன்னை பல கேள்விகள் கேட்ட யட்சனை தருமர் ஒரு கேள்வி கேட்டார். 'யாராலும் வெற்றி கொள்ள முடியாத...என் தம்பியரை..மாய்த்துப் பின் உயிர் பெறச் செய்த தாங்கள் யார்'என்றார்.

'மகனே! நான் தர்ம தேவதை..நான் உனக்கு தேய்வீகத் தந்தை.நீ உனது கொள்கையில் எவ்வளவு தீவிரமாய் இருக்கிறாய் என பரீட்சித்தேன்..உனக்கு வேண்டும் வரம் கேள்' என்றார்.

'தரும தேவதையே!முனிவருக்கு அரணியுடன் கூடிய கடைகோலை தர வேண்டும்' என்றார் தருமர்.

'மானாக வந்து அதைக் கவர்ந்தது நான்தான்..இந்தா' என தர்ம தேவதை..திருப்பிக் கொடுக்க தருமர் பெற்றுக் கொண்டார்.

'இன்னும்..என்ன வரம் வேண்டும்..கேள்' என்றது தர்ம தேவதை.


'பன்னிரெண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்த வனவாசம் போல..ஓராண்டு அஞ்ஞாதவாசமும் அமைய வேண்டும்' என்றார் தருமர்.

"உங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது..நீங்கள் வெற்றி வீரராக திகழ்வீர்கள்' என அருளி தர்ம தேவதை மறைந்தது.

பாண்டவர்கள் பின் ஆச்ரமத்தை அடைந்து..கடைகோலை முனிவரிடம் கொடுத்து வணங்கினர்.

பின் ஓராண்டு அஞ்ஞாத வாசம் பற்றி திட்டமிட்டனர்.வனவாசத்தின் போது உடன் இருந்த முனிவர்களையும், மற்றவர்களையும்...அஞ்ஞாதவாசம் இருக்கும் போது உடன் இருக்க முடியாது என்பதால்....அனைவரும் தருமரின் வேண்டுகோளை ஏற்று பிரிந்து சென்றனர்.இனி அட்சயபாத்திரத்தின் தேவையும் இருக்காது என்றாயிற்று.

வன பர்வம் முற்றியது..

அடுத்த பதிவு முதல்..விராட நாட்டு நிகழ்ச்சிகளைக் கூறும் விராட பர்வம்.

5 comments:

கோவி.கண்ணன் said...

//அடுத்த பதிவு முதல்..விராட நாட்டு நிகழ்ச்சிகளைக் கூறும் விராட பர்வம். //

கீசகன் வதம் ..... தொடரட்டும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கோவி

வசீகரா said...

Great Work Sir! Keep it up! waiting for porkala katchi. waiting for abimanyu, aravan and ghatodhkajan's entries.

வசீகரா said...

Great Work Sir! Waiting for porkala kaatchi..Also for the young heroes entries (Abhimanyu, aravan and Ghatothkajan).

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வசீகரா

Post a Comment