Thursday, June 4, 2009

43-யட்சன்

பன்னிரண்டு கால வனவாசம் நெருங்கியது.அதற்குள் பாண்டவர்களுக்கு ஒரு சோதனை வந்தது.வேள்விக்கு உதவும்..அரணியுடன் கூடிய கடைகோல் ஒன்றை முனிவர் ஒருவர் இழந்தார்.அது ஒரு மானின் கொம்பில் ஒட்டிக்கொள்ள...மருண்ட மான்..அதனுடன் ஓட்டம் பிடித்தது.தமது வேள்வி தடைபடாமல் இருக்க..அதை மீட்டுத்தரும்படி..பாண்டவர்களை அம்முனிவர் கேட்டார்.

மானைத் தொடர்ந்து..பாண்டவர்களும் ஓடினர்.ஆயினும் மானைப் பிடிக்க இயலவில்லை.மானும் ஓடி மறைந்தது.

முனிவருக்கு உதவ முடியவில்லையே..ஏன் இந்த இழிவு நமக்கு..என பாண்டவர்கள் எண்ணினர்.

பாஞ்சாலியை அவையில் அவமானப் படுத்தினவனை ..அன்றே கொன்றிருக்க வேண்டும்..அதனால்தான் இந்த இழிவு...என்றான் பீமன்.

அன்று நாக்கில் நரம்பின்றி பேசினானே கர்ணன்..அவனை அன்றே கொன்றிருக்க வேண்டும்...அதனால்தான் இந்த இழிவு என்றான் பார்த்தன்.

சகுனி மாயச் சூதாடும்போது..அப்போதே அவனை கொன்றிருக்க வேண்டும்..அதனால் தான் இந்த இழிவு என்றான் சகாதேவன்.

இந்நிலையில் தாகம் ஏற்பட..நகுலனை தண்ணீர் எடுத்துவரக் கூறினார் தருமர்.

தண்ணீரைத் தேடி அலைந்த நகுலன்..வெகு தொலைவில்..ஒரு தோப்புக்கு நடுவே ஒரு குளம் இருப்பதைக் கண்டான். அதன் அருகே சென்று..நீரை மொண்டு பருக ஆரம்பிக்கையில் 'நில்' என்ற குரல் கேட்டது.அதை அலட்சியம் செய்துவிட்டு..நகுலன் நீரைப் பருக அவன் சுருண்டு வீழ்ந்து மாண்டான்.நீண்ட நேரம் ஆகியும் நகுலன் வராததால்..சகாதேவனை..தருமர் அனுப்ப..அவனுக்கும்..நகுலனுக்கு ஆன கதியே ஆயிற்று.

பின்னர் அனுப்பப்பட்ட பார்த்தன்.பீமன் ஆகியோரும் இக்கதிக்கு ஆளாகினர்.

நீண்ட நேரம் எவரும் திரும்பாததால்..தருமர்..அனைவரையும் தேடிச் சென்றார்.

அவர்களுக்கு ஆனக் கதியை எண்ணி..புலம்பி..அழுதார்.நாக்கு வரண்டது.தண்ணீர் அருந்த நினைத்த போது...'நில்' என்றது ஒரு குரல்..இத் தடாகம் என்னுடையது.என் அனுமதியின்றி இவர்கள் இறங்கியதால்..இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.என் கேள்விகளுக்கு பதில் தராவிடின்...உன் முடிவும் இப்படித்தான் ஆகும்.நான் கேட்கும் கேள்விகளுக்கு...தகுந்த விடை அளித்தால்...நீ நீர் பருகலாம்' என்றது.

இது யட்சன் குரல் என அறிந்த தருமர்..'கேளுங்கள்..என்னால் இயன்றவரை பதில் தருகிறேன்' என்றார்.

(அடுத்த பதிவு..யட்சன் கேள்வியும்...தருமர் பதிலும்)

No comments:

Post a Comment