Wednesday, June 10, 2009

45 - யட்சன் கேள்வியும்..தருமர் பதிலும் (தொடர்ச்சி)

யட்சன்-இதயம் இல்லாதது எது

தர்மர்-கல்

உலகம் எங்கும் செல்பவனுக்கு உற்ற துணை எது

கல்வி

வேகம் மிக்கது எது

நதி

நோய் உடையவனின் நண்பன் யார்

மருத்துவர்

உயிர் விடுபவனுக்கு உற்ற துணை யார்

அவன் செய்த நல்லறம்

எது அமிழ்தம்

பால்

வெற்றிக்கு அடிப்படை எது

விடா முயற்சி

புகழ் வாழ்க்கை எதனால் அடையலாம்

இல்லாதவர்க்கு ஒன்றைத் தருவதால்

உலகில் தனியாக உலா வருபவன் யார்

சூரியன்

உலகில் மிகச் சிறந்த தர்மம் எது

கொல்லாமை

உலகெங்கும் நிறந்திருப்பது எது

அஞ்ஞானம்

முக்திக்கு உரிய வழி எது

பற்றினை முற்றும் விலக்குதல்

யாரிடம் கொண்ட நட்பு மேன்மை உடையது

சாதுக்களிடம் கொண்ட நட்பு

நாட்டுக்கு உயிர் போன்றவன் யார்

அரசன்

எது ஞானம்

மெய்ப்பொருளை (கடவுள்) அறிவதே ஞானம்

ஒருவனுக்கு பகையாவது எது

கோபம்

முக்திக்கு தடையாக இருப்பது எது

'நான்' என்னும் ஆணவம்

பிறப்புக்கு வித்திடுவது எது

ஆசை

எப்போதும் நிறைவேறாதது எது

பேராசை

யார் முனிவர்

ஆசை அற்றவர்

எது நல்வழி

சான்றோர் செல்லும் வழி

எது வியப்பானது

நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்ட போதும்..தனக்கு மரணம் இல்லையென்று மனிதன் கருதுகின்றானே அதுதான் வியப்பானது

மீண்டும் பிறவி வராமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்

எப்போதும் நல்லறமே செய்தல் வேண்டும்.

2 comments:

நிகழ்காலத்தில்... said...

நல்ல விசயங்கள், தொடர்ந்து எழுதுங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நிகழ்காலத்தில்

Post a Comment