Tuesday, May 19, 2009

41-அட்சயபாத்திரம்

பாண்டவர்களது வனவாசம் முடிவுக்கு வரும் காலம் நெருங்குவதை உணர்ந்த துரியோதனன்..அவர்களை எப்படி அழிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.அப்போது துர்வாசர் பத்தாயிரம் சீடர்களுடன் துரியோதனன் இருக்கும் இடம் வந்தார்.

துர்வாசரின் மந்திர சக்தி அனைவரும் அறிந்ததே.அவர் அருளிய மந்திர சக்திதான் கன்னிப்பருவத்தில் குந்தி கர்ணனை பெற்று எடுக்க காரணமாய் அமைந்தது.

அவருக்கு அருளும் சக்தியும் உண்டு.பிறரை மருளச் செய்யும் சக்தியும் உண்டு.

தன் சூழ்ச்சிக்கு..துர்வாசரை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் துரியோதனன்.அதனால் அவரை நன்கு உபசரித்து வணங்கினான்,அவனது உபசரிப்பைக் கண்டு மகிழ்ந்தவர்..'உனக்கு வேண்டும் வரம் கேள்' என்றார்.துர்வாசர் சினம் கொண்டால் அதைத் தடுத்து நிறுத்தவும் யாராலும் முடியாது.

தவமுனிவரே! நீங்கள் பாண்டவர் இருக்குமிடம் செல்ல வேண்டும்.அங்கு அவர்கள் அனைவரும் உணவு உண்டபின் செல்ல வேண்டும்'' என வேண்டினான்.(எல்லோரும் உணவு உண்டதும் சென்றால்..அட்சயபாத்திரத்தில் உணவு பெருகாது.துர்வாசருக்கு உணவு அளிக்கமுடியாது.அதனால் அவர் சினம் கொண்டு அவர்களுக்கு சாபமிட்டு அழித்து விடுவார் என எண்ணினான்.)

துர்வாசரும்...பாண்டவர் இருக்குமிடம், தன் சீடர்களுடன் சென்றார்.அவர்களை பாண்டவர்கள் முறைப்படி வரவேற்றனர்.நீராடிவிட்டு வருவதாகக் கூறிவிட்டு,சீடர்களுடன் தடாகம் சென்றார் அவர்.

'அட்சயபாத்திரத்தில்..இனி உணவு பெருகாதே' என திரௌபதி கலக்கமுற்றாள்.கண்ணனை பிரார்த்தித்தாள்.கண்ணனும் அவள் முன் தோன்றி..தன் பசியை போக்கக் கோரினார்.திகைத்தாள் திரௌபதி.

கண்ணன் அந்த அட்சயபாத்திரத்தை கொண்டுவருமாறு பணித்தார்.

அதில் ஒன்றும் இல்லை என்றவாறு..அப்பாத்திரத்தை கொணர்ந்தாள் பாஞ்சாலி.ஆனால் அதன் மூலையில்..ஓரத்தில்..ஒரு சோற்று பருக்கை இருந்தது.அதை எடுத்து கண்ணன் வாயில் போட..பாரதம் முழுதும்..பசி அடங்கியது.

நீராட சென்ற முனிவருக்கும்..பரிவாரங்களுக்கும் ..அவர்கள் இதுவரை சுவைத்தறியா..உணவு உண்ட திருப்தி ஏற்பட்டது.

அப்போதுதான்..முனிவரும்..காலமில்லா காலத்தில்..தருமரின் ஆசிரம் சென்று, அவர்களை சோதனைக்கு உட்படுத்தியது தவறு என உணர்ந்தார்.

இப்படியாக..துரியோதனனின் இம் முயற்சி தோல்வி அடைந்தது.

No comments:

Post a Comment