Sunday, May 10, 2009

39-கௌரவர் மானபங்கம்

அந்தணன் கூற்றைக்கேட்ட திருதிராட்டிரன்...பாண்டவர்கள் மேன்மேலும் சிறப்புறுவது நல்லதல்ல..என எண்ணினான்.வெளிப்பார்வைக்கு பாண்டவர் நன்மையை விரும்புவது போல பேசினாலும்..உள்ளத்தால் வெறுத்தான்.

காட்டில் பாண்டவர் நிலை அறிந்த துரியோதனன் கவலையுற்றான்.பதின்மூன்று ஆண்டுகளில் செயலிழந்து போவார்கள் என எண்ணியது தவறு என எண்ணினான்.

சகுனி..துரியோதனனிடம்..'நாமும் காட்டிற்குச் சென்று பாண்டவர் நிலையறிந்து..நம் செல்வச் சிறப்பையும் காட்டி வருவோம்' என்றான்.

திருதிராட்டினனிடம்..'பசுக்குலங்கள் காட்டில் கொடிய மிருகங்களால் அவதிப்படுகின்றன.அவற்றைக் காக்க கானகம் போகிறோம்'என்றான் துரியோதனன்.

பின் துரியோதனன் முதலானோர்..மனைவி மக்களுடன்..உயர்தர ஆடை..அணிகலன்கள்..அணிந்து பாண்டவர் இருக்குமிடம் அருகே கூடாரம் அமைத்து தங்கினர்.

அருகில் இருந்த தடாகத்தில்..கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந்து நீராடுவது..கௌரவர்களுக்கு இடையூறாக இருக்க..கந்தர்வர்களை உடனடியாக விலகுமாறு..துரியோதனன் கட்டளையிட்டான்.

இதனால்..கந்தர்வர்களுக்கும்...துரியோதனன் கூட்டத்திற்கும் இடையே போர் மூண்டது.சித்திர சேனன் தலைமையில்..கந்தர்வர்கள் போரிட..சித்திரசேனனும் மாயப்போரில் ஈடுபட..கர்ணனின் தேர் உடைந்தது.அவன் போர்க்களத்தை விட்டு ஓடினான்.துரியோதனின் தம்பியரும் புறமுதுகிட்டனர்.எஞ்சிய..துரியோதனன்..மற்றும் சிலரை..கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர் கந்தர்வர்கள்.

கௌரவர்களின் எஞ்சிய வீரர்கள் சிலர்..தர்மரிடம் வந்து..'துரியோதனனைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டனர்.ஆனால் பீமனோ 'அவர்கள் தீவினையின் பலனை அனுபவிக்கிறார்கள்..அனுபவிக்கட்டும்' என்றான்.

தம்பி..ஆபத்தில்..யார் இருந்தாலும் உதவ வேண்டுவது உலக இயல்பு..மேலும் இப்போது நம் சகோதரர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை உடனே காப்பாற்ற வேண்டும்..என்றார் தருமர்.

இப்படி..இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது...துரியோதனனின்..அபயக் குரல் கேட்டது..'சகோதரர்களே..எங்களையும்..எங்கள் மனைவியரையும்..கந்தர்வர்கள் கட்டி இழுத்துச் செல்கிறார்கள்..உடனேவந்து காப்பாற்றுங்கள்'

உடன்...பாண்டவர்கள்..கந்தர்வர்களை தடுத்தி நிறுத்தி..பலரை அழித்தனர்.அப்போது...அர்ச்சுனனுக்கு...சித்திரசேனன்..தனக்கு..இந்திர லோகத்தில்..பல நுணுக்கங்களை போதித்தவன் என்ற உணர்வு வர..அவன் பாதம் பணிந்து...நடந்த விவரங்களை அறிந்தான்.

'அர்ச்சுனா...இந்த துரியோதனன்..உங்களை அவமானப் படுத்த வந்தான்.அதை அறிந்த தேவர்கோமான்...அவன் கூட்டத்தை கட்டி இழுத்துவர என்னைப் பணித்தான்' என்றான் சித்திரசேனன்.

பின்னர் தருமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க..துரியோதனன் கூட்டம் விடுவிக்கப்பட்டது.

போரில்..இறந்த கந்தர்வர்களை..இந்திரன் மீண்டும் உயிர் பிழைக்க வைத்தான்.நாணித் தலைக்குனிந்திருந்த துரியோதனனை நோக்கி தருமர் 'நகரம் சென்று நல்லாட்சி செய்வாயாக' என்றார்.

புறங்கொடாப் போர் வீரன் என்ற பெருமித வாழ்வு பறிப்போக..கர்ணனிடம் துரியோதனன் புலம்பினான்.பின்..துச்சாதனனை நோக்கி'தம்பி..நீ ஆட்சியை மேற்கொள்..நான் உயிர் துறக்கப்போகிறேன்' என்றான்.

பதிலுக்கு, கர்ணன்'இதுவா க்ஷத்திரியர் இயல்பு..நாம் இப்போது சந்தித்தது..இறுதிப்போர் அல்ல' என்றான்.

கர்ணன்..மேலும் துரியோதனனுக்கு..உற்சாகம் ஊட்டினான்.போரில்..அர்ச்சுனனை தான் கொல்வேன் என்றான்.

அசுரர்களும்...போரில்..தேவர்கள் பாண்டவர்களுக்கு உதவினால்..அசுரர்கள் துரியோதனனுக்கு உதவுவதாகக் கூறினர்.

இதனால்...துரியோதனன் மனம் மாறி..அஸ்தினாபுரம் வந்தான்.

காட்டில்..நடந்தவற்றை அறிந்த பீஷ்மர்..துரியோதனனிடம்..'இனியும் கர்ணனைப் போன்றோரை நம்பாதே.தான் தப்பித்தால் போதும் என கந்தர்வப் போரில் உன்னை விட்டு ஒடியவன் அவன்..அர்ச்சுனனே உன்னை வந்து காத்தான்' என்றார்.

ஆனால்...துரியோதனன்..அவர் பேச்சை புறக்கணித்தான்.

No comments:

Post a Comment