Tuesday, April 14, 2009

36- பீமன்...அனுமன் சந்திப்பு

தருமர் தன் மூத்த சகோதரர்களுடன் நான்கு திசைகளிலும் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார்.'கடத்தற்கரிய வழியில் அனைவரையும் நான் தூக்கிச் செல்வேன்' என்றான் பீமன்.

ஆனாலும்...நடைப்பயணத்திலேயே ..கந்தமாதன மலை மேல் அவர்கள் சென்றபோது இடியும்,மின்னலும், மழையும் படாதபாடு படுத்தின.

திரௌபதி மயங்கி விழுந்தாள்.அப்போது கடோத்கஜன் தோன்றி திரௌபதியை தூக்கிச் சென்றான்.கடோத்கஜனுடன் வந்த மற்ற அசுரர்கள்...தருமர்,நகுலன்,சகாதேவனை தூக்கி உரிய இடத்தில் சேர்த்தனர்.

அனைவரும் கயிலைமலை சென்று கடவுளை வணங்கினர்.பத்ரிகாச்ரமத்தை அடைந்து...சித்தர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.அப்போது ஒருநாள் திரௌபதி அங்கு காணப்பட்ட ஆயிரம் இதழ்களுடன் கூடிய மணம் மிக்க 'சௌகந்திகம்' என்ற மலரின் எழிலில் மனத்தை பறிகொடுத்தாள்.அது போன்ற மலர்கள் வேண்டும் என பீமனிடம் வேண்டினாள்.அம்மலர்கள் குபேரன் நாட்டில் மட்டுமே உள்ளது என அறிந்து பீமன் குபேரபுரி நோக்கி நடந்தான்.

பீமன் செல்லும் வழியில் குரங்கு ஒன்று பெரிய உருவத்துடன் வாழை மரங்களிடையே படுத்திருப்பதைக் கண்டான்.அதை எழுப்ப பேரொலி செய்தான்..கண் விழித்த குரங்கு 'இங்கு தேவர்களும் வர அஞ்சுவர்.இதற்குமேல் உன் பயணத்தைத் தொடராது திரும்பிப் போ' என்றது.

இது கேட்ட பீமன் 'என்னையா..திரும்பிப்போகச் சொல்கிறாய்...நான் பாண்டுவின் மைந்தன்...உன் வாலை மடக்கி..எனக்கு வழி விடு' எனக் கூச்சலிட்டான்.

உடன் குரங்கு..'உன் ஆணவப் பேச்சை நிறுத்து..உனக்கு வலிமை இருந்தால்..என்னைத் தாண்டிச் செல்' எனக்கூற...'முதியோரை அவமானப்படுத்த நான் விரும்பவில்லை' என்றான் பீமன்.

அப்படியானால்..என் வாலை ஒரு புறமாக நகர்த்தி விட்டுப் போ..என்றது குரங்கு.

ஆனால்...பிமனால்...குரங்கின் வாலை அசைக்க முடியவில்லை. பீமன் தன் இயலாமையை எண்ணி வருந்தினான்...'என்னைத் தோல்வியுறச் செய்த நீர் யார்? சர்வ வல்லமை படைத்த நாராயணனா? அல்லது சிவபெருமானா?' என பீமன் கேட்டான்.

விரைந்து எழுந்த மாருதி...பீமனை ஆரத்தழுவி...'தம்பி...நானும் வாயுவின் குமரந்தான்..' என அனுமன் தன்னைப் பற்றிக் கூறினான்.

ராமாவதாரக் காலத்தில்..அஞ்சனைக்குப் பிறந்த வாயுமகன் அனுமன்...தன் தம்பி முறையான பீமனை தழுவிக் கொண்டான்.பீமன் புதியதோர் ஆற்றல் பெற்றான்.

'உன் எதிரிகளால்..உன்னை ஒன்றும் செய்ய முடியாது.' என்று அனுமன் ஆசி கூற பீமன் மலர்களுக்கான பயணத்தைத் தொடர்ந்து...குபேரனது தோட்டத்தில் அம்மலர்களைக் கண்டு..அதைப் பறிக்க முயன்ற போது...அங்கிருந்த அரக்கர்கள் அவனை தடுக்க...அனைவரையும் பீமன் தோற்கடித்தான்.

குபேரனுக்கு தகவல் பறந்தது.

No comments:

Post a Comment