Sunday, September 6, 2009

59 - அர்ச்சுனனின் மனகலக்கம்

பீஷ்ம பருவம் (பீஷ்மரின் வீழ்ச்சியை உரைப்பது)

குருக்ஷேத்திரத்தில் இரு திறத்துப் படைகளும் அணி வகுத்து நின்றன.தனக்குச் சாரதியாக இருக்கும் கண்ணனை நோக்கி அர்ச்சுனன் 'பரந்தாமா! தேரை விரைவாகச் செலுத்து..என் எதிரில் போர் செய்வது யார் என்பதை தெரிந்து கொள்ள வெண்டும்.துரியோதனனுக்கு துணையாக வந்திருப்போரைக் காணவேண்டும்' என்றான்.

பார்த்தசாரதியும்..தேரினை கௌரவர் படைமுன் செலுத்தினார்.அப்போது பீஷ்மரையும்,துரோணரையும்,துரியோதனனையும்,அவன் தம்பியர்களையும்,நண்பர்களையும்,எண்ணற்ற வீரர்களையும் அர்ச்சுனன் கண்டான்.உள்ளம் கலங்கினான்.'பாட்டனார் பீஷ்மரையா கொல்லப் போகிறேன்..குரு துரோணாச்சாரியாரையா கொல்லப் போகிறேன்..துரியோதனன் முதலியோர் என் பெரியப்பா மகன்கள்..என் சகோதரர்கள் ..இவர்களையா கொல்ல வேண்டும்..இந்த இரக்கமற்ற பழியையையும்..பாவத்தையும் ஏற்கவா பிறந்தேன்?' என்றான்.

'கண்ணா..என் உடல் நடுங்குகிறது..உள்ளம் தளர்கிறது..என்னால் நிற்க முடியவில்லை..கால்கள் நடுங்குகின்றன..காண்டீபம் கை நழுவுகிறது.போரில் சுற்றத்தாரைக் கொன்று பழியுடன் வரும் நாட்டை நான் விரும்பவில்லை...உறவினரையா கொல்வது'

துரியோதனன் பாவிதான்..அவனைக் கொல்வதால் என்ன பயன்..சுற்றத்தைக் கொல்லும் பாதகத்தை என்னால் எண்ண முடியவில்லை.உறவினர்கள் பிணமாகக் கிடக்கும் போது..நாம் இன்பம் காண முடியுமா?என்னால் இந்த போரை ஏற்க முடியவில்லை.'

என்றெல்லாம் கூறியவாறு..கண்ணீர் மல்க ..தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டான்..காண்டீபன்.

அர்ச்சுனனின் குழப்பத்தை உணர்ந்த கண்ணபிரான்..'அர்ச்சுனா..இந்த நேரத்திலா கலங்குவது? வீரர்க்கு இது அழகா..பேடியைப் போல நடந்துக் கொள்ளாதே!மனம் தளராதே! எழுந்து நில்' என்றார்.

அர்ச்சுனன்' பீஷ்மரையும்..துரோணரையும் எதிர்த்து எவ்வாறு போரிடுவேன்?அதைவிட பிச்சை எடுத்து வாழலாம்..இவர்களை எல்லாம் இழந்தபின்..ஏது வாழ்வு?அதனால் பெருமை இல்லை..சிறுமைதான்..
எனக்கு எது நன்மையை உண்டாக்கும்..உன்னை சரணடைந்தேன்..நல்வழி காட்ட வேண்டும்' என்றான்.

கண்ணன் அர்ச்சுனனிடம் கூற ஆரம்பித்தார்...

1 comment:

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

Post a Comment