Sunday, March 1, 2009

23 - சகுனியும்...துரியோதனனும்..

ராஜசூயயாகம் முடிந்தபின்.. துரியோதனன் பொறாமையால் மனம் புழங்கினான்.

பாண்டவர் ஆட்சியிருக்கும் வரை என் ஆட்சியும் ஒரு ஆட்சியா? அர்ச்சுனனின்..காண்டீபம் என்ற வில்லும், பீமனின் கதாயுதமும் என்னை இகழ்ச்சி ஆக்கிவிடும் போல இருக்கிறது.ராஜசூயயாகத்திற்கு..எவ்வளவு மன்னர்கள் வந்தனர்..எவ்வளவு பரிசுகளை கொண்டுவந்து கொட்டினார்கள்..அந்த தர்மனிடம்..அப்படி என்ன இருக்கிறது? என்று பொறாமைத் தீ கொழிந்துவிட்டு எரிய ஏங்கினான்.

பாண்டவர் வாழ்வை அழித்துவிட வேண்டும்..என தன் மாமனாகிய சகுனியை சரண் அடைந்தான்.

மாமனே! அவர்கள் செய்த யாகத்தை மறக்கமுடிய வில்லை.அங்கு வந்த பொருட்குவியலைப் பற்றிக்கூட எனக்கு கவலையில்லை.ஆனால்..அவ்வேள்வியில் என்னை கேலி செய்தனர்.எள்ளி நகையாடினர் ..என்றெல்லாம்..சொல்லி என் தந்தையை பொறாமை கொள்ளச் செய்..என்றான்.

உடன் சகுனி..'நீ ஒப்பற்ற தெய்வமண்டபம் ஒன்று செய்.அதன் அழகைக் காண பாண்டவரை அழைப்போம்.மெல்லப் பேசிக்கொண்டே..சூதாட்டம் ஆட..தர்மனை சம்மதிக்க வைப்போம்.என் சூதாட்டத்தின் திறமையை நீ அறிவாய்.அதன் மூலம் அவர்களை உனக்கு அடிமை ஆக்குவேன்' என்றான்.

இருவரும்..திருதிராட்டினனிடம் சென்று உரைத்தனர்.ஆனால் அவன் சம்மதிக்கவில்லை.ஆனால்..சகுனி சொல்கிறான்..

'உன் மகன் நன்கு சிந்திக்கிறான்..ஆனால் பேசும்போதுதான் தடுமாறுகிறான்.அவன் நீதியை இயல்பாகவே அறிந்துள்ளான்.அரச நீதியில் தலை சிறந்து விளங்குகிறான்.பிற மன்னர்களின்..செல்வமும்..புகழும் வளர்வதுதான் ஒரு மன்னனுக்கு ஆபத்து.அந்த பாண்டவர் வேள்வியில் நம்மை கேலி செய்தனர்.மாதரும் நகைத்திட்டாள்..சூரியன் இருக்கையில்.. மின்மினிப் பூச்சிகளைத் தொழுவது போல..ஆயிரம் பலம் கொண்ட உன் மகன் இருக்கையில்..அவனுக்கு வேள்வியில் முக்கியத்துவம் இல்லாமல்..கண்ணனுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.'

இதைக் கேட்ட திருதிராட்டினன்.."என் பிள்ளையை நாசம் செய்ய..சகுனியே..நீ பேயாய் வந்திருக்கிறாய்.சகோதரர்களிடையே பகை ஏன்?பாண்டவர்கள் இவன் செய்த பிழை எல்லாம் பொறுத்தனர்.பொறுமையாக உள்ளனர்..அவர்கள் இவனைப் பார்த்து சிரித்ததாக அற்பத்தனமாய் பேசுகிறாய்...துரியோதனன் தரை எது...தண்ணீர் எது..என தடுமாறியது கண்டு..நங்கை நகைத்தாள்.இது தவறா?..தவறி விழுபவரைக் கண்டு..நகைப்பது மனிதர்கள் மரபல்லவா? என்றான்.

துரியோதனன்..தன் தந்தையின் பேச்சைக் கேட்டு..கடும் சினம் கொண்டான்.இறுதியாக தந்தையிடம்..'நான் வாதாட விரும்பவில்லை.நீ ஒரு வார்த்தை சொல்லி பாண்டவர்களை இங்கு வரவழைப்பாயாக..ஒரு சூதாட்டத்தில்..அவர்கள் சொத்துக்களை..நாம் கவர்ந்து விடலாம்..இதுவே என் இறுதி முடிவு' என்றிட்டான்.

No comments:

Post a Comment