Tuesday, February 24, 2009

22 - ராஜசூயயாகம்

சக்கரவர்த்தியாகிவிட்ட யுதிஷ்டிரர் தலைமையை எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர்.தம்பியர் நால்வரும்..நான்கு திக்குகளிலும் சென்று மன்னர்களின் நட்பைப் பெற்றனர்.

மாமுனிவர்களும்...பீஷ்மரும்.துரோணரும்,கௌரவரும், இந்திரபிரஸ்தம் வந்தனர்.கண்ணபிரானிடம்..வெறுப்பு கொண்டிருந்த சிசுபாலனும் வந்திருந்தான்.இந்திரபிரஸ்தம்..ஒரு சொர்க்கலோகம் போல
திகழ்ந்தது.

நாரதர்..சொன்னாற்போல..ராஜசூயயாகம் இனிதே நடந்தது.துரியோதனன் மனதில் பொறாமைத் தீ வளர்ந்தது.

வந்தவர்களுக்கு...மரியாதை செய்யும்..நிகழ்ச்சி ஆரம்பித்தது.யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது.பீஷ்மர்..மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து..கண்ணனுக்கு..முதல் மரியாதை என்று தீர்மானிக்க...அதன்படி..சகாதேவன் கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.

இதையெல்லாம்..பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன்...தன் அதிருப்தியைக் காட்ட..கண்ணனை பலவாறு இகழ்ந்தான்.ஆத்திரத்தில் பீஷ்மரையும்,யுதிஷ்டிரரையும் புண்படுத்தினான்.ஆடு..மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும்..இடையன் என்றும் கண்ணனை ஏசினான்.கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்றான்.(கங்கையில் பலரும் நீராடுவதால்..கங்கையை பொதுமகள் என்று ஏசினான்)

குந்தியின் மந்திர சக்தியால்..யமதர்மனை நினைத்து..பெற்ற மகன் யுதிஷ்டிரர் என்பதால்..அவரும் சிசுபாலனின் தாக்குதலுக்கு ஆளானார்.

சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன்..ஒரு கட்டத்தில்..அவனைக் கொல்லும் காலம் நெருங்கி வருவதை உணர்ந்து..அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார்.அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்து வீழ்த்தியது.அவன் மேனியிலிருந்து ஒரு ஒளி புறப்பட்டு..கண்ணனின் பாதங்களில் வந்து சேர்ந்தது.

சிசுபாலன் சாப விமோசனம் பெற்றான்.

No comments:

Post a Comment